
Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
நாயக்கர், பாண்டியன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
கல்லத்தி
திருமணஸ்தலம் : சுப்பிரமணிய சுவாமிகள் அமர்ந்த நிலையில் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். முருகனின் திருமணத்தலம் என்பதால் அனைத்து தெய்வங்களும் ஏகாந்தமாகக் காட்சியளிக்கின்றனர். இத்திருத்தலத்தின் கருவறையில் ஸ்ரீ சத்தியகிரிஸ்வரர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீகணபதி, ஸ்ரீபவளக்கனிவாய் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களும் அருகருகே அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறையில் நக்கீரர், சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்திரி, சித்தவித்யாதார், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகிய அனைத்துத் தெய்வங்களும் ஒருங்கிணைந்து காட்சியளிக்கின்றனர்.
பாலாபிஷேகம் திருப்பரங்குன்றம் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலுக்கு மட்டுமே செய்யப்படும்.
சனிபகவான் சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். சனிபகவான் சிவபெருமானிடம் தவம் இருந்த நவக்கிரகங்களில் மற்றவர்களின் பார்வையை விட தன்னுடைய பார்வைக்கு அதிக வலிமை வேண்டும் என்றும். சிவனுக்கு அடுத்தபடியாக ஈஸ்வர பட்டம் வேண்டும் என்றும் வேண்டியதற்கிணங்க அவருக்கு சனீஸ்வரன் என்ற பட்டம் கிடைத்தது. இத்திருக்கோயிலில் சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்திருப்பது சிறப்புடையதாகும். இத்தலத்தில் உள்ள சனிபகவானைத் தரிசனம் செய்தால் திருநள்ளாறு தலத்தில் சனிபகவானை வழிபட்ட சிறப்புடையதாகும் என்பது ஐதீகம்.
பிரம்மனின் குமாரர்களாகிய ஜனகர், ஜனந்தனர், ஜனாதனர், ஜனத்குமாரர் ஆகிய ஜனாகதி முனிவர்கள் நான்கு பேர்களுக்கும் ஞானத்தைக் கொடுப்பதற்காக தன்னுடைய திருக்கரங்களால் சின்முத்திரையைக்காட்டி உபதேசம் செய்த கோலம் தட்சிணாமூர்த்தி கோலம். ஆதி குருவாகிய இவர் நமக்கெல்லாம் ஞானத்தை வழங்குவதற்காக கல்லால மரத்தின் கீழ் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். சிவபெருமானே குருவடிவமாக தோன்றிய கோலம் தட்சிணாமூர்த்தி கோலம் ஆகும்.
ஆவுடை நாயகி என்றழைக்கப்படும் கோவர்த்தனாம்பிகைக்கு இங்கு தனிசன்னதி உள்ளது. இங்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் போது முருகப்பெருமான் ஆவுடைநாயகி அம்பாளிடம் திருக்கை வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது. ஆ என்றால் பசு. பசு எப்படி தன் கன்றுக்கு அமுதூட்டுவதோடு எத்தனையோ குழந்தைகளுக்கு தாயாக மாறி அமுது கொடுத்துக் காப்பதுபோல், இந்த ஆவுடை நாயகியும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் என்னும் அமுதினைக் கொடுத்து காத்துக்கொண்டிருக்கிறாள்.
கணபதி வழிபாட்டில் சிறப்பு வாய்ந்தது வல்லப கணபதி வழிபாடு. முருகப்பெருமான் பத்மாசுரனை வதம் செய்யும் பொழுது, அசுரனின் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திலிருந்தும் ஒவ்வொரு அசுரர்கள் உருவாகிக் கொண்டிருந்தனர். இதனால் முருகப்பெருமான் தனது அண்ணனாகிய கணேச மூர்த்தியிடம் வேண்ட, அவர் பத்மாசுரனின் தாயை தனது தும்பிக்கையால் தூக்கி வந்து தன்னை குழந்தை வடிவமாக்கி அவளின் மடியில் அமர்ந்துக்கொண்டு அவரின் கர்ப்ப ஸ்தானத்தை அடைத்துவிட்டார். இதனால் அசுரர்கள் மீண்டும், மீண்டும் உயிர்ப்பித்து எழ முடியவில்லை. பின்பு முருகப்பெருமான் பத்மாசுரனை சம்ஹாரம் செய்கிறார். இத்தகைய சக்தியினைப் பெற்றவர் வல்லப கணபதி ஆவர். இவரினை வழிபட்டால் இடையூறின்றி காரியத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
கோயிலுக்குள் செல்லும் முன் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் கை, கால்களை அலம்பி சுத்தம் செய்து விட்டுச் செல்வர். இத்தீர்த்தத்தில் பரு, பத்து, தேமல் முதலிய சரும நோய் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்குவதற்காக உப்பு, மிளகு, வெல்லம் முதலியவற்றைப் பக்தர்கள் வாங்கிப் போடுவார்கள். மேலும் பக்தர்கள் மீனுக்குப் பொரியும் வாங்கிப் போடுவார்கள். இத்தீர்த்தம் தெய்வானைக்காக முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.
இத்தீர்த்தம் குன்றின் அடிவாரத்திலிருந்து வடபகுதியில் நெடுஞ்சாலைக்கருகில் உள்ளது. இதனைச் சத்தியகூபம் என்றும் அழைப்பர். இத்தீர்த்தத்தில் தான் முருகப் பெருமானுக்குத் தை மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
சரவணப் பொய்கை கோயிலின் கிழக்கே அரை கிலோமீட்டர் தூரத்தில் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இது சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்டது. தென்புறம் மலையும், வடபுறம் நீண்ட படிக்கட்டுகளும் அமைந்து பொய்கைக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலும் இப்பொய்கையில் நீராடிவிட்டு மக்கள் வழிபாட்டிற்குச் செல்கின்றனர். இப்பொய்கை குன்றின் அடிவாரத்தின் கிழக்கே, முருகப் பெருமானின் திருக்கை வேலினால் உண்டாக்கப்பட்டதாகக் கூறுவர்.
திருவிளையாடல் புராணத்தில் 45 வது படலமான பன்றிக்கு முலைப்பால் கொடுத்த படலம். சுகலன் ,சுகலை இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு 12 குழந்தைகள். சுகபோக வாழ்வில் செழித்த இவர்கள் குருபகவானின் தவவாழ்வை கலைத்ததன் காரணமாக சாபத்திற்குள்ளாகினர். இதனால் பாண்டியமன்னனின் வேட்டைக்குப் பலியாயினர். இதன்காரணமாக பன்னிரு பன்றிக்குட்டிகளும் பாலில்லாமல் தவித்தன. அப்போது பன்றிக்குட்டிகளின் அழுகுரல் கேட்டு சிவபெருமானே தாய்பன்றியாக மாறி பன்றிக்குட்டிகளுக்கு முலைப்பால் கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. சிற்பிகள் கற்தூண்களில் அழகாக கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர்.
ஆலவாய் அண்ணல் தடாதகை பிராட்டியாரை பார்த்தவுடன் அம்மையின் மூன்றாம் தனம் மறைந்து திருமணப்பெண்ணாக மாறினார் என புராணங்கள் கூறுகின்றன.மூன்று தனங்களுடன் காட்சியளிக்கும் தடாதகைபிராட்டியார். மலையத்துவமன்னனின் மகள்.
இத்திருக்கோயிலில் யானை மகாலின் முன்புறம் உள்ள தூணில் உள்ளது.இவருக்கு மாறன் இரதிபதி,மலரம்புடையோன், மீன்கொடியுடையோன் என பலபெயர்கள் உள்ளது.கணவன் மனைவி பிரிந்துள்ளோர்கள்,புதிதாக திருமணபந்தத்தை தொடங்கவிருப்பவர்கள், என்றும் இரதிமன்மதன் போல் இணைபிரியாதிருக்க வேண்டி மஞ்சள் குங்குமம் சந்தனம் சாற்றி அகல்விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
விஷ்ணு பகவான் தன் பக்தனை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார். சிங்கமுகமும் மனிதஉடலும் கொண்ட சிற்பம். வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.நரசிம்ம அவதார சிற்பம் திருக்கோயிலின் திருவாச்சி மண்டபத்தில் அமைந்துள்ளது.
தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் தினசரி 125 பக்தர்களுக்கு சேவை மனப்பான்மையுடன் நண்பகல் 12.30 மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் 125 நபர்களுக்கு எனில் ரூ.4500/-ம் (ஒரு நாள்), , நிலையான வைப்பு நிதி எனில் ரூ.65000/ம்(வருடத்தில் ஒரு நாள்), பக்தர்கள் திருக்கோயிலுக்கு வழங்கலாம் . நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80ஜி ) பெற இயலும்.
24 அறைகள் கொண்ட தங்கும் விடுதி, மற்றும் 10 அறைகள் கொண்ட நவீன தங்கும் விடுதி என இரண்டு தங்கும் விடுதிகள் உள்ளன.
தங்கரதம் இழுக்க ஒரு நாளுக்கு, நபர் ஒன்றுக்கு ரூ.2,500 . தங்க ரதம் திருவாட்சி மண்டபத்தை சுற்றி வலம் வருகிறது.
சரவணப்பொய்கைக்கு மிக அருகில் இலவச முடிகாணிக்கை அமைந்துள்ளது,
பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பொருள்களை எடைக்கு எடை துலாபார காணிக்கையாக செலுத்தலாம். கோவிலுக்குள் கொடிமரம் அருகில் துலாபார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்கேற்ப திருக்கோயிலில் உள்ள சஷ்டி மண்டபம் அருகில் நூலகம் செயல்பட்டு வருகிறது
கிரிவலப் பாதையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுற்றுச்சூழல் பூங்கா செயல்பட்டு வருகிறது
கோயிலின் முன்புறம் பக்தர்களின் வசதிக்கேற்ப இலவச காலணி பாதுகாக்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக சக்கர நாற்காலிகள் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சேவையை பயன்படுத்த விரும்புவோர் 91 8015287819 என்கிற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
1) திருக்கோயில் சஷ்டி மண்டபம் அருகில் ஆண்களுக்கு-4 பெண்களுக்கு-8 என 12 இலவச கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. 2) சரவணப்பொய்கை (சலவைக் கூடம்) அருகில் ஆண்களுக்கு-4 பெண்களுக்கு-4 என 8 இலவச கழிவறை வசதி மற்றும் 28 இலவச குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. 3) சரவணப்பொய்கை (கிழக்கு பக்கம்) அருகில் ஆண்களுக்கு-6 பெண்களுக்கு-6 என 12 இலவச கழிவறை வசதி மற்றும் 2 இலவச குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. 4) கிரிவலப் பாதையில் சுற்றுச் சூழல் பூங்கா எதிரில் ஆண்களுக்கு-4 பெண்களுக்கு-5 என 9 இலவச கழிவறை வசதி மற்றும் 2 இலவச குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. 5) கிரிவலப் பாதையில் பசுமடம் அருகில் ஆண்களுக்கு-4 பெண்களுக்கு-5 என 9 இலவச கழிவறை வசதி மற்றும் 2 இலவச குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள் :1) வள்ளி திருமண மண்டபம் 2) தேவசேனா திருமண மண்டபம் எனும் இரு திருமண மண்டபங்கள் உள்ளன. (இரு மண்டபங்களும் சேர்த்தே திருமணத்திற்கு வாடகைக்கு விடப்படுகின்றன.)
பக்தர்களின் வசதிக்கேற்ப திருக்கோயிலின் முன்பகுதியில் பக்தர்களின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக பொருட்கள் பாதுகாப்பு அறை (கண்காணிப்பு கேமராவுடன்) அமைக்கப்பட்டுள்ளது.
1) இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோயில் வளாகத்தில் திருவாச்சி மண்டபம் அருகில் சுத்தமான குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. தினமும் சுவாமியை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 2) சுவாமியை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோயில் வளாகத்தில் கம்பத்தடி மண்டபம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 3) கிரிவலப் பாதையில் பூங்கா அருகில் பக்தர்களின் வசதிக்கேற்ப இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 4) தங்கும் விடுதியில் பக்தர்களின் வசதிக்கேற்ப இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.





