Home/Temples/TN/Mayiladuthurai/Arulmigu Agneeswarar Temple, Nalladai - 609306
hrce

Arulmigu Agneeswarar Temple, Nalladai - 609306

அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில், Nalladai

🕉️ அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி Mayiladuthurai, TN அருள்மிகு சுந்தரநாயகி அம்மன்
Arulmigu Agneeswarar Temple, Nalladai - 609306 — image 1
1 / 9
Also known as:பரணி கோயில்

History & Architecture

Century

15th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பிற்கால சோழர்கள்

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

செவ்வக வடிவம்

Pooja Timings

சாயரட்சை பூஜை05:00 AM to 06:00 AM IST
அர்த்தஜாம பூஜை08:00 AM to 08:30 AM IST
காலசந்தி பூஜை08:30 AM to 09:30 AM IST
உச்சிக்கால பூஜை11:30 AM to 12:00 PM IST

Temple Speciality

பரிகாரம்

மிருகண்ட மகரிஷி தனக்கு குழந்தை வரம் வேண்டி எந்தயர் உமை பாகனிடம் வரம் பெற்று இத்தலத்திற்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்வதற்க்காக பொருள் உதவி கேட்டு விசித்திர வீரசோழனிடம் மகரிஷி விண்ணப்பித்தார் மன்னரும் மணம் மகிழ்ந்து பொருள் உதவி அளித்தார். இத்தலத்தின் கிழக்கு பகுதியில் குண்டம் அமைத்து மாசி மாத மகாசிவாராத்திரி அன்று யாகம் தொடங்கி நான்காம் கால பூர்ணாஹுதி நிறைவு நேரத்தில் சாலிய மாமுனிவர் என்ற சிவனடியார் ஒரு நவரத்தின பரிசுத்த பட்டாடை ஒன்றினை மன்னரிடம் அளித்தார். அதை ஏற்ற செங்கோல் மன்னர் ரிஷிகளிடம் கொடுத்தார். அவர்கள் பட்டாடையை பூர்ணாஹுதியுடன் ஹோமத்தில் இட்டனர். அதை கண்ட சாலியமாமுனிவர் பதட்டத்தோடு பட்டாடையை தீயிலிட்டதைக்கண்டு மனம் வருந்தினார். மிருகண்ட மகரிஷி சாலிய மாமுனிவரைப் பார்த்து பக்தா மனம் வருந்தாதே, நீ கொடுத்த ஆடையை அக்னிக்கு அளிக்கவில்லை. இறைவன் எம்பொருமான் அரசனுக்கே அளித்தோம் நாளை இறைவனின் திருமேனியில் அவ்வாடையை நீ காண்பாய் எனக் கூறினார். அவ்வண்ணமே இவ்வாலயத்தின் ஈசனின் திருமேனியில் தீயிலிட்ட ஆடை நல் ஆடையாக இறைவன் மீது இருக்க முனிவர் ஆனந்தம் அடைந்து கண்ணீர் மல்க அன்பருக்கு அன்பனே அருள் சுரக்கு திருநல்லாடை தரித்த நாதரே என்று மகிழ்ச்சி பொங்க பாடினார். யாகத்திற்கு பின்னால் மிருகண்ட மகரிஷிக்கு மார்கண்டேயர் மகனாகப்பிறந்தார். மிருகண்ட மகரிஷிகுண்டம் நடத்திய அந்த இடம் இன்றும் குண்டம் குளம் என்று வழக்கத்தில் உள்ளது. இந்த யாகம் நிறைவு பெற்று மிருகண்ட மகரிஷியின் எண்ணம் நிறைவேறிய நாள் பரணி நட்சத்திர தினம் எனவே பரணி நட்சத்திரகாரர்களுக்கு பரிஹார டஸ்தலமாக போற்றப்படுகிறது.

Temple Tank

குண்டாங்குளம்

மிருகண்ட மகரிஷிகுண்டம் நடத்திய அந்த இடம் இன்றும் குண்டம் குளம் என்று வழக்கத்தில் உள்ளது

திருக்குளம்

இத்திருக்கோயிலின் எதிர்புறம் திருக்குளம் 42722 சதுரஅடியில் அமைந்துள்ளது.

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

இத்திருக்கோயிலில் பொது மக்கள் வசதிக்காக குடிநீர் வசதி ஆர்.ஓ. கோயிலின் உட்புறம் வைக்கப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →