Home/Temples/TN/Mayiladuthurai/Arulmigu Subramaniya Swamy Temple, Thiruvidaikazhi - 609310
Heritage Templehrce

Arulmigu Subramaniya Swamy Temple, Thiruvidaikazhi - 609310

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Thiruvidaikazhi

🕉️ அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி Mayiladuthurai, TN அருள்மிகு தேவசேனா
Arulmigu Subramaniya Swamy Temple, Thiruvidaikazhi - 609310 — image 1
1 / 4
Also known as:சோழநாட்டு திருச்செந்தூர்மகிழாரணியம்

History & Architecture

Century

9th - 10th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

அருணகிரிநாதர்

Agama Tradition

காரண ஆகமம்

Sanctum Shape

தூங்கானை வடிவம்

Vimanam Type

கஜாப்ப்ருஷ்டம் விமானம்

Sacred Tree (Sthalavriksha)

திருகுராமரம் , மகிழமரம்

Pooja Timings

காலசந்தி பூஜை08:30 AM to 09:00 AM IST
உச்சிக்கால பூஜை12:30 PM to 01:00 PM IST
சாயரட்சை பூஜை05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை08:30 PM to 09:00 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது. அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் கழிந்த தலம் என்பதால், இதற்கு விடைக்கழி என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும். முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.

Temple Tank

சரவண தீர்த்தம் ( பொய்கை )

தூர்வாரி பல ஆண்டுகளாகின்றது . பயன்படுத்த இயலாது நிலையிலுள்ளது

Services

அன்னதானம்

இத்திருக்கோயிலில் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பணி

இத்திருக்கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

இத்திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ஆர்.ஓ. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

கழிவறை வசதி

இத்திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →