அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில், திருவெண்காடு

Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நால்வர்
Poet Saint
மாணிக்கவாசகர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏகாதலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
ஆலமரம், வில்வம், கொன்றை
காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் ஒன்று திருவெண்காடாகும். ஆதி சிதம்பரம் என்றழைக்கப்பெறும் இத்தலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறும் சிறப்புடையது. சோழநாட்டுத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரையில் 11-வது ஸ்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையால் பெருமைகளை உடையது. ஸ்ரீசுவேதாரணியேசுவரர், ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீஅகோரர் என்று மூன்று மூர்த்திகள், சோம, சூரிய, அக்கினி என்ற மூன்று தீர்த்தங்கள், வடலால், கொன்றை, வில்வம் என்ற மூன்று தல விருட்சங்கள் எனத் தனிச்சிறப்புடைய ஸ்தலம்
1. கொடி மரத்தின் அருகில் அக்னி தீர்த்தம் 2. அக்னி தீர்த்தம் அருகில் சூரிய தீர்த்தம் 3. அம்மன் சன்னதி எதிர்புறம் சந்திர தீர்த்தம்
நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கு இராஜகோபுரம் அருகில் அமைந்துள்ள திருக்கோயில் அலுவலகத்தில் 2 நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளது.
உடை மாற்றும் அறை எட்டு அறைகள் கொண்ட ஒரு கட்டிடம் அம்பாள் சன்னதி அருகில் அமைந்துள்ளது.
கிழக்கு இராஜகோபுரம் அருகில் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
சுத்திகரீக்கப்பட்ட குடிநீர் வசதி புதன் சன்னதி அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு இராஜகோபுரம் மற்றும் மேற்கு இராஜகோபுரம் அருகில் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.





