அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், கோனேரிராஜபுரம்

Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னிமரம்
திருநல்லம் மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் முச்சிறப்புடையது. இத்தல மூர்த்தியாகிய உமாமகேஸ்வரப் பெருமானைத் தேவர்களும் முனிவர்களும் அரசர்களும் வழிபட்டனர். அவர்களில் பூமிதேவிக்கு அசுரபயம் போக்கி அருள் செய்ததும் சந்திர குல மன்னன் புரூவர்களுடன் குட்ட நோய் போக்கி அருள் செய்ததும் கௌதம முனிவர்களுக்கு ஆனந்த தாண்டவக் காட்சி காட்டியளியதும் இத்தலப் பெருமானின் அருட்டிறங்களாகும். நலமார் மறையோர் வாழ் நல்ல நகர் என ஞானசம்பந்தப் பெருமான் புகழும் சிறப்புடைய தலம் திருநல்லமாகும். வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்ந்த நல்ல ஊர் என்பதால் நல்லம் எனப் பெயர்பெற்றதோ எனக் கருத வேண்டியுள்ளது. சோழ மன்னர்கள் வந்து தங்கி திருநல்லமுடையாரை வழிப்பட்டதால் கோனேரிராசபுரம் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டதோ எனவும் கருத இடமுண்டு. திருநல்லத்தின் எட்டு திசைகளிலும் அட்டதிக்கு பாலகர்களால் நிறுவி பூசித்து வழிபட்ட சிவத்தலங்கள் சூழ்ந்து உள்ளன.
இத்திருத்தலத்தில் பூமிதேவியால் ஏற்படுத்தி நீராடப் பெற்ற பூமி தீர்த்தமும் பிரமணால் ஏற்படுத்தப் பெற்ற பிரம்ம தீர்த்தமும் விசுவ கர்மாவினால் நிர்மாணிக்கப் பெற்ற ஞானகூடம் என்னும் கிணறும் உள்ளன. இத்தீர்த்தங்களில் நீராடுவோர் பைசாச பயமும் குட்ட நோயும் பிற பாவங்களும் நீங்கி நலம்பெறுவர் எனத் தலவரலாறு கூறுகிறது.
மூலிகை ஓவியம் உள்ளது





