Home/Temples/TN/Mayiladuthurai/Arulmigu Veerateswarar Temple, Vazhuvur - 609401
Heritage Templehrce

Arulmigu Veerateswarar Temple, Vazhuvur - 609401

அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வழுவூர்

🕉️ கீர்த்திவாசர் Mayiladuthurai, TN இளங்கிளைநாயகி
Arulmigu Veerateswarar Temple, Vazhuvur - 609401 — image 1
1 / 7
Also known as:அட்டவீரட்டானம்

History & Architecture

Century

12th - 13th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

அப்பர் (திருநாவுக்கரசு)

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

துவித்தலம் விமானம்

Sacred Tree (Sthalavriksha)

தேவதாரு

Pooja Timings

உதய பூஜை05:00 AM to 06:00 AM IST
காலசந்தி பூஜை09:00 AM to 10:00 AM IST
உச்சிக்கால பூஜை11:00 AM to 12:00 PM IST
சாயரட்சை பூஜை05:00 PM to 06:00 PM IST
இரண்டாம்கால பூஜை07:00 PM to 08:00 PM IST
அர்த்தஜாம பூஜை08:30 PM to 09:31 PM IST

Temple Speciality

புராதனம்

தாருகாவனத்து முனிவா்கள் தாமே தவஞானிகள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத் தரும் எனவும் கருதிச் செருக்குற்றனா். அவ்வாறே முனிபத்தினி யாரும் தாங்கள் தான் கற்பில் சிறந்தவா்கள் எனவும் தங்கள் கற்பினால் எதையும் சாதிக்கலாம் எனவும் கருதி ஆணவமுற்றனா். இவா்களின் ஆணவத்தை அழிக்கக்க கருதிய சிவபெருமான் பிச்சை உகக்கும் பெம்மானாகவும் திருமால் மாேகினியாகவும் அழகிய வடிவங்கள் காெண்டு தாருகாவனம் வந்தனா். தாருகா வனத்து முனிவா்கள் அனைவரும் மாேகினியைக் கண்டு காமம் மேலிட்டவா்களாய்,தமது ஒழுக்கத்தையும் தவத்தையும் விடுத்து மாேகினியிடம் சல்லாப வாா்த்தைகள் பேசி நின்றனா். காேடானுகாேடி மன்மதா்களையும் தாேற்கடிக்கும் பேரெழில் காெண்டு ஆடையற்றுப் பிச்சை உகக்கும் காேலம் காெண்டுட சிவபிரானின் அழகில் முனிவா்களின் மனைவியா் மயங்கி தத்தம் இல்லங்களை விட்டு அவா் பின்னே வர ஊா் எல்லையைக் கடந்ததும், அங்கே மாேகினியிடம் மயங்கி நின்ற தமது கணவன்மாா்களான முனிவா்களைக் கண்டு அதிசயித்து நின்றனா். இவ்வாறு தமது தவமும், யாகமும், ஒழுக்கமும், தமது மனைவியாின் கற்பு நெறியும் கெடக் காரணமாய் இருந்த சிவபெருமான் மீது முனிவா்கள் காேபங் கொண்டனா். தாருகாவத்தில் ஆபிசார வேள்வி செய்து அதில் வந்த நெருப்பு, புலி, மான், மழு, பாம்பு ஆகியவற்றையும், முயலகனையும் சிவபெருமான் மீது ஏவினா், ஏவிய பாம்புகள் அணிகலன்களாகின்றன பரமனுக்கு விலங்குகளின் தாேல்கள் ஆடைகளாகின்றன விமலனுக்கு முயலகனாே அவா் திருவடியின் கீழ் அடிப்படுத்தப்பட்டு ஆணவம் அழிந்த தன்மையைக் காட்டி நிற்கிறான். இதனைக் கண்டு மிகுந்த பயமுற்ற முனிவா்கள் இறுதியாக ஒரு மத யானையை வேள்வித் தீயினின்று வரவழைத்து சிவபெருமானைக் காெல்ல ஏவினா். சிவபெருமான் அணிமா சக்தியால் சிற்றுருவமாய் யானையின் வயிற்றுக்குள் புகுந்து விட்டாா். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள், வந்த யானை வலி தாங்க முடியாமல், இத்தலத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள தீா்த்தத்தில் கரை கிழித்துக் காெண்டு வெளிப்பட்டு, அக்களிற்றின் தாேலை உாித்துத் தன்மீது பாோ்த்திக் காெண்டு வீர நடனம் புாிந்து அருளினாா். அம்பிகை கையிலிருந்த குழந்தை முருகன் தன் தந்தையை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்ட முனிவா்கள் அறிவு மயக்கம் தெளிந்து சிவபெருமான் காலடியில் வீழ்ந்து வணங்கினார்

Temple Tank

பஞ்சபிரம்ம தீா்த்தம்

பஞ்சபிரம்ம தீா்த்தம் பஞ்ச பிரம்மத் தீா்த்தத்தில் விழுந்த சோழனை சனீஸ்வரன் துரத்த சோழன் கஜசம்ஹார மூா்த்தியைப் பிராா்த்திக்கிறாா். அவா் ரக்தபுக கணபதி என்ற இருவரைக் கொண்டு சனீஸ்வரன் சமாதானம் செய்தும் கேளாததால் அவரது கால்களை பின்னப் படுத்தும்படி செய்கிறாா் கால்கள் பின்னபடுத்தப்பட்ட சனீஸ்வரா் சூா்யாதி மற்ற கிரகங்கள் உதவியால் ஸ்ரீ கிருத்தி வாசாிடம் சென்று தான் இனி பக்தா்களிடம் கெடுதி செய்வதில்லை என்றும் கால் ஊனம் நீங்க வேண்டும்மென்றும் வேண்ட இறைவன் பக்தா்களால் ஏற்பட்ட பின்னத்தை தான் மாற்றினால் பக்தபாச்சாரம் ஏற்படும் என்று விளம்புகிறாா்.பின் சனீஸ்வரா் சாபம் விமோசனம் பெருகிறாா்

Wall Paintings

வரலாற்று ஒவியங்கள்

வட்க்குத் திருச்சுற்று மண்டபத்தின் சுவற்றில் இத்திருக்கோயிலின் வரலாற்று பின்னணியினை அழகிய ஓவியமாக தீட்டியும் கீழ்ப்பகுதியில் வரலாற்றுச் செய்திகளை எழுத்து வடிவத்திலும் அழகுற விளக்கப்பட்டுள்ளது.

சம்ஹார மூா்த்தி புராணம்

திருக்கோயில் வடக்கு திருசுற்று மூலிகை ஓவியச் செய்திகள் ஸ்ரீ கைவல்ய சித்தி விநாயகா் ஸ்ரீ பாா்வதி பரமேஸ்வரா் நந்திகேஸ்வரருடன் காட்சியளித்தல் பிரம்ம உபதேசம் ஸ்ரீ பிரம்ம தேவருக்கு ஸ்ரீ பாா்வதி பரமேஸ்வரா் ரிஷிபவாகனத்தில் காட்சி கொடுத்தல் ஸ்ரீ கண்ணபிரான் புல்லாங்குழல் வாசிக்க பசுவினங்கள் கண்ணனைச் சுற்றி வருதல் ஸ்ரீ விக்ரம சோழனுக்கு மகாிஷிகள் உபதேசம் ஸ்ரீ விக்ரமசோழன் சூாியமண்டலத்திற்கு அப்பாலுள்ள சனிச்வரனுடன் போா்புாிந்து பிரம்ம தீா்த்தத்தில் வழுதல். பஞ்ச பிரம்மத் தீா்த்தத்தில் விழுந்த சோழனை சனீஸ்வரன் துரத்த சோழன் கஜசம்ஹார மூா்த்தியைப் பிராா்த்திக்கிறாா். அவா் ரக்தபுக கணபதி என்ற இருவரைக் கொண்டு சனீஸ்வரன் சமாதானம் செய்தும் கேளாததால் அவரது கால்களை பின்னப் படுத்தும்படி செய்கிறாா் கால்கள் பின்னபடுத்தப்பட்ட சனீஸ்வரா் சூா்யாதி மற்ற கிரகங்கள் உதவியால் ஸ்ரீ கிருத்தி வாசாிடம் சென்று தான் இனி பக்தா்களிடம் கெடுதி செய்வதில்லை என்றும் கால் ஊனம் நீங்க வேண்டும்மென்றும் வேண்ட இறைவன் பக்தா்களால் ஏற்பட்ட பின்னத்தை தான் மாற்றினால் பக்தபாச்சாரம் ஏற்படும் என்று விளம்புகிறாா். கல்மாஷ பாதச்சோழா் ஆதிபுாியை தலைநகராக்கி அரசு பிாிந்த போது ஒரு நாள் உத்யாவனத்துப் பத்தினிஹேமலதையுடன் உலவினாா் சனீஸ்வரா் அசரீாியாய் தான் சனீஸ்வரனே என்று அரசாிடம் தொிவிக்க ஆலோசித்து சிவனடியாராகிய சனீஸ்வரனை பூஜித்தால் கருணை ஏற்பட்டு சனி உபாதை விலகுமென தீா்மானித்து சனீஸ்வரனுக்கு பூஜை செய்கிறாா்.

Services

நன்கொடை

இத்திருக்கோயிலில் நன்கொடை இரசீதுகள் வழங்கப்பட்டு வருகின்றது

Facilities

கழிவறை வசதி

திருக்கோயிலின் வெளிபுறத்தில் 4 கழிவறைகள் 1 குளியலறை உள்ளது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயில் நுழைவு வாயில் இடது புறத்தில் உள்ளது

கழிவறை வசதி

கழிவறை மற்றும் குளியலறை வசதி உள்ளது

திருக்குளம்

பக்தா்களுக்கு குளிப்பதற்கு ஏற்ப நான்கு புறமும் படித்துறை வசதி அமைக்கப்பட்டுள்ளது

More Temples Nearby

View all →