அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருப்புகலூர், திருப்புகலூர்

Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
மூன்று நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
புன்னை
1. இரண்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஒருங்கே அமைய பெற்ற ஸ்தலம். 2. மூவரால் பாடல் பெற்றது, அக்னி பகவான் தவம் செய்து பாபவிமோசனம் பெற்ற ஸ்தலம். 3. மூன்று கால சிவலிங்கங்கள் உள்ள ஸ்தலம் கடந்த காலம்,நிகழ் காலம் , எதிர் காலம், மூன்று கால பாவங்களையும் நீக்கும் ஸ்தலம் . 4. அப்பர் சுவாமிகள் ஐக்கியமானதும், முருகநாயனார் அவதரித்த ஸ்தலமுமாகும். 5. சுந்தரருக்கு செங்கற்கலை பொன்கற்களாக்கி தந்த வாஸ்து ஸ்தலம். 6. இத்தல இறைவி பிரசவம் பார்த்த ஐதீகம் பெற்ற ஸ்தலம். 7.சதய மற்றும் ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்குரிய பரிகார ஸ்தலம். 8. திருக்கோவிலை சுற்றி அகழி உள்ள ஸ்தலம்.
அகழியாக திருக்குளம் அமைந்துள்ளது. . இந்த தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர்.
ஸ்வாமி சன்னதி தேவ கோஷ்டத்தில் உள்ள நடராஜர் திருவடிவத்தின் கீழே காரைக்கால் அம்மையார் தரையில் அமர்ந்து அறிய இசை கருவியை இசைப்பது போல சிற்பம் உள்ளது.மூன்று சிற்ப உருவங்கள் இருக்கிறது. தாருகன் என்னும் அரசன் சண்டையிட காளிதேவி அவனுடன் எட்டு கைகளுடன் சண்டையிடுவது போன்ற சிற்பம் உள்ளது.
திருக்கோவிலில் தினசரி அன்னதான சேவை நடைபெறுகிறது.
திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குளியலறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச காலனி பாதுகாக்குமிடம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
