அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

Century
12th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
வெள் வாழை
சைவசமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இத்திருத்தலம் வந்து இறைவனை வணங்கி, இத்தல நாயகராம் தேவகுருநாதரை போற்றி இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். நவகோல் நாயகன் வியாழ பகவான் இத்தேவூர் தலம் வந்து இங்கு எழுந்து அருளியுள்ள சர்வேசுவரனை வணங்கி தேவகுரு என்னும் பட்டத்தினை பெற்றார். தனக்கு அனுகிரகம் செய்தது போல் தன்னை வணங்குவோரையும் அணுகிரகிக்க வேண்டும் என்று குரு வேண்ட அவ்வேண்டுகோளுக்கு இறங்கிய சிவபெருமான் தானே அணுகிரக தட்சிணாமூர்த்தியாய் இருந்து இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். எனவே குருஸ்தலமாகவும் விளங்குகிறது. திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்திற்கு வந்து பாடாமல் இத்தலத்தை வைப்பு தலமாக வைத்து பாடியுள்ளார்.
ஆலயத்திற்கு தென் கீழ்புறம் உள்ள திருக்குளம் சிறப்பு வாய்ந்தது. இதில் தேவர்கள் நீராடியதாக கூறப்படுகிறது. இது தேவ தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.





