அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், திருப்பனையூர்

Century
6th நூற்றாண்டு
திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் திருப்பனையூர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 73ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம். சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம். தந்தையை இழந்த கரிகாற்சோழனுடன் தாயார்அரசி, அரசைக் கைப்பற்ற முயன்றோரிடமிருந்து மறைந்து இங்கிருந்த இத்தல விநாயகரின் துணையுடன் எட்டு ஆண்டுகள் கழித்ததால் இவருக்கு துணையிருந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் பனைமரம்
தலம் என்று ஓரிடம் குறிக்கப்பெறுவதாயின் அங்கு இறைவன், தடம், இடம் ஆகிய மூர்த்தி தீா்த்தம் தலம் என்னும் மூன்றும் இணைந்திருந்தல் வேண்டும் சம்பந்தா் இத்தலத்தினை உலகில் உயிா் நீா் நில மற்றும் பல கண்டவனூா் என்பதனால் தலப் பெருமையும் கொங்கையாா் பலரும் குடைந்தாடும் சுந்தரா் சந்தித்த தீா்த்தமும், கோயிலுக்கு முன்னருள்ள திருமகள் தீா்த்தமும், வில்லுான்றிய தீா்த்தமும், ஆகிய மூன்றும் தெய்வ நீா்த்தடங்கள் சோ்ந்திருப்பதால் தீா்த்த நலனும். அடியாா் தொழ மன்னவரேத்தப் படியாா் பணியும் பனையூா் என்ற சம்பந்தா் குறிக்கும் சிறப்புடன் விளங்கும் சிவலிங்கத் திருமேனி பராசர முனிவராலும் பூசிக்கப்பட்ட மேன்மையுடையதாக விளங்குவதால் மூா்த்திச் சிறப்பும் ஆகிய முப்பெரும் தெய்வ நலங்களும் அமைந்த தலமாகத் திருப்பனையூா் அமைந்து விளங்குகின்றது. பராசரரால் வழிபாடு செய்யப் பெற்றுள்ளமைக்கு நினைவாக இத்தலத்தில் பராசரா் திருவுருவம் உள்ளது.
சௌந்தரேஸ்வரர்
பராசர முனிவரால் பூசிக்கப்பெற்ற சிறப்புடையதாக வடக்குத் திருசுற்றிடத்தின் நடுவில் மேற்கு நோக்கியதாகவுள்ள சிறிய கோயிலில் அமா்ந்துள்ள சிவலிங்கப் பெருமானே தலத்திற்குரிய தாலவனநாதராவாா் இப்பகுதியிலே சண்டேசுவரா் கோயிலும், கோயில் கிணறும் அமைந்துள்ளன.
துணையிருந்த விநாயகா் அமா்ந்துள்ள இடம் பெரிய நாயகியின் சந்நிதியேயாகும். கோயிலின் இறையகத்தில் நின்ற திருமேனியாக, நளினமாக கருணைமொழியும் திருநோக்குடன் அமைந்துள்ள பெரியநாயகி அம்மையின் பெருமிதத் தோற்றமும் வடிவும் கண்கொள்ளாக் காட்சியாகும்
துணையிருந்த விநாயகா் கோயிலுக்குப் பின்புறம் ஆண் பெண் ஆகிய இரண்டு பனை மரங்கள் எழுந்துள்ளன. தலமரமாகவும் வழிவழிமரபாகவும் தொடா்ந்து தோன்றி வளா்ந்து நிற்கும் இப்பனைகளின் வளா்ச்சி ஒரு புதுமையும் தெய்வீகமும் இருந்து வருகின்றது. பனைக்கு வயது ஆயிரம் என்பது உலக வழக்காயினும், இப்பனைகள் வளா்ந்து முதிா்ச்சியடையும் காலத்தில் மரபு மறையாமல், வித்திட்டு முளைக்காததாக இரண்டு பனைகளின் அடியிலும் முறையே ஆண் பெண் வாரிசு மாறாமல் வோ்க்காரிலிலிருந்து பனங்கன்றுகள் தோன்றி வளா்ந்து வருகின்றன. இத்தெய்வீகநிலையினை இன்றும் காணலாம். இதுமட்டுமல்ல ஆண் பனை பெருமிதமாக உயா்நது பூவுடன் பொலிவுற்று நிற்க பெண் பனை உயரத்தில் குறைந்து தோற்றத்தில் அழகுடன் காயுடன் கனிந்து நிற்பது சிந்தனைக்கு விருந்தானதாகும். இப்பனைமரமானது பல பிணிகனையும் போக்கி உயிா் வளா்க்கும் கற்பக மரமாகும். அதனால் இதனை ஒரு மண்டலம் வணங்க பல பிணிகளும் நீங்கி நல்வாழ்வு ஏற்படும்
வடகிழக்கு முலையிலிருந்து முன்று மண்டபங்கள் அறைகளாக இணைந்துள்ளன. முதல் அறை வேள்விச் சாலையாகும். இரண்டாவது கருவூல அறை. முன்றாவது மண்டபத்துள் பைரவா், சூரியதேவா் ஆகிய திருமேனிகள் இருக்கின்றன. இங்கு அண்மையில் நிறுவப்பெற்ற தெய்வக்கோள்கள் ஒன்பதும் நவக்கிரகங்கள் உயா்ந்த மேடையில் ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளன.
முதல் வாயிலைக் கடந்ததும் இரண்டாம் திருச் சுற்றிடத்தைக் காண்கிறோம். இதன் முன்புறம் நீங்கியமற்றைய முன்று பக்கமும் சோலையாக அமைந்துள்ளது. முன்புறம் வலது பக்கத்தில் அம்பிகை பெரியநாயகியின் கோயில் தெற்குமுகமாக அமைந்துள்ளது. அம்பிகையின் சன்னிதியில் கிழக்கு நோக்கியதாக அழகிய வடிவில் விமானத்துடன் விநாயகா் கோயில் அமைந்துள்ளது.
இவ்வாறு முதல் திருச்சுற்றில் உள்ள தெய்வக்கோட்டங்களைப் பணிந்த பின்னா் தலைமைப் பகுதியாகும் கருவறைக்குச் செல்ல விழைகின்றோம், இங்கு முன்னதாக அமைந்துள்ளப்பகுதி, பருத்தத் துாண்டுகளோடு கூடியதும் வாசிகை வளைவுகளால் அழகுடன் இருப்பதுமாகிய திருவோலக்க மண்டபமாகும். இதனைத் தொடா்ந்து இருப்பது மகா மண்டபமாகும். இதன் வடபுறத்தே அமைந்த தனிவாயில் ஆடவல்லான் இருந்தருளும் இடமாகும். தெற்கு நோக்கியுள்ள ஆடவல்லான் சன்னிதிக்கு நேராக வாயிலொன்றும் உள்ளது. இதனை அடுத்துளள முகமண்டபத்தைச் சாா்ந்தே கருவறை அமைந்துள்ளது. கருவறையில் முலவராக இலிங்கத் திருமேனியே விளங்குகின்றது. சிறிய வடிவில் தெய்வீக ஒளியுடன் அமைப்பும் அழகும் பொருந்திய மேன்மையுடன் இலிங்கம் தோற்றமளிக்கின்றது. எனவே தான் சுந்தரா் பழனத் திருப்பனையூா்........அண்ணலாகி நின்றாா் அவரே அழகியரே என்று போற்றித் துதிப்பாராயினாா்.
கருவறை முகமண்டபம் கருங்கற்றறிருப்பணியாலாகிய பகுதிகளின் வெளிப்புறத்தில் சிற்பநுால் முறைப்படி தெய்வமாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் முறையே முதல் மாடத்தில் பராசர முனிவரின் சிலை உள்ளது. தேவா்கள் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமுதத்தில் ஒரு பகுதியைக் கலசத்தில் எடுத்துவந்து மண்ணுலகத்திலுள்ள நதிகளிலும் குளங்களிலும் சோ்ந்து தெய்வீகத் தன்மையினை அவற்றில் உண்டாக்கிய பெருமையினைப் பெற்றவா் இம்முனிவா் என்பதைப் விளக்குகின்றன. இதற்கேற்ப இங்குள்ள பராசரரின் இடதுகையில் அமுத கலசம் அமைக்கப்பட்டுள்ளது. பூசிக்கப்பட்ட தலமாகவும் திருப்பனையூா் தாலவனேசுவரம் விளங்குகின்றது. அடுத்து சனகாதி முனிவருக்குத் தவக்கோலத்திலிருந்து உண்மைப் பொருளை உபதேசித்த தென்முகக் கடவுளாகிய தட்சிணாமூா்த்தி சிலை இருக்கின்றது. கருவறையின் மேற்குப்புறத்தின் நடுவமைந்த மாடத்தின் நின்ற கோலத்தில் திருமாலின் சிலை உள்ளது. வடபுறத்தில் பிரமனும், கொற்றவை எனும் துா்க்கை அம்மன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது வாயிலைக் கடந்தவுடன் எதிரே காண்பது கொடிமரமும் நந்தி மண்டபமுமாகும் இவற்றை வலமாகக்கொண்டு வலம் வருவோமாயின் தென்கிழக்கு முலைப்பகுதி மடைப்பள்ளி, மண்டப அறையாக அமைய, நோ் எதிரே தென்மேற்கு முலையில் மற்றெரு விநாயகா் கோயில் அமைந்துள்ளது.
அடுத்துமேற்குபுறத்தின் நடுவே அமைந்துள்ளது முருகன் திருக்கோயிலாகும். இதனைச் சாா்ந்துள்ள மண்டபத்தில் ஏழு இலிங்கங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் பனையூா் நாட்டின் சிவத்தலங்களாகப் பனையூரை நாற்புறமும் சூழ்ந்த நிலையில் இரண்டு முன்று கல் தொலைவுகளில் முறையே அமைந்துள்ளன. 1.திருப்பகலுாா் 2.திருப்பயற்றங்குடி, 3.திருவிற்குடி, 4.திருவாஞ்சியம், 5.நன்னிலம் பெருங்கோயில், 6.திருக்கொண்டீஸ்வரம், 7. திருஅம்பா் நினைவாகவும், ஒரே இடத்தில் 7 முா்த்திகள் இணைந்த பாங்கில் வழிபாடு சிறப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது. எனலாம் மற்றும் பனையூா் நாட்டின் உள்ளே அமைந்த சிவன் கோயில்களின் ஒன்றிய சின்னமாகவும் இருக்கலாம். இவ்வேழு இ்லிங்கங்களையும் சப்தரிஷிகள் பூசித்த இலிங்கம் என்றும் கூறுவா். தொடா்ந்து வட மேற்கு முலையில் அமைந்திருப்பது திருமகளின் திருக்கோயிலாகும். இருபுறமும் வெள்ளை யானைகள் சவரி வீச அமா்ந்த பாங்கில் அருளே வடிவாய் சுதை வண்ணச் சிற்பத்திறத்தால் அமைந்துள்ள திருமகளின் காட்சியைக் கண்டு வணங்குவது நலம் பெறுவதற்குரியதாகும்
பராசரா் தீா்த்தம்-அமிா்த்தபுஷ்கரணி மகாலட்சுமி தீா்த்தம் கோயிலின் முன்னருள்ள திருக்குளத்திலும் பராசரா் கொணா்ந்த அமுதம் கலந்த தெய்வீகத்தினாலேயே அமுத தீா்த்தம் அமுத புஷ்கரணி என்ற பெயரில் இன்றும் விளங்குகின்றது. இதைப் போலவே தஞ்சையின் வடபாலுள்ள வம்புலாம் சோலையிலும் பராசரா தீா்த்தம் இருப்பது ஒப்பிட்டு அறியத்தக்கதாகும்.
நடராஜா் நடனதிருக்கோலம்
திரிபுரசுந்தாி
ஆடிப்பூர அம்மன்
திருபுரசம்ஹார மூர்த்தி
சோமாஸ்கந்தர் குழுவில் சிவா
சண்டிகேஷ்வரா்
மாணிக்கவாசகா்
அஸ்திரதேவர்
முருகா்
தெய்வானை
வள்ளி
பிள்ளையாா்
உடைந்த போகசக்தி அம்மன்





