அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், சாட்டியக்குடி

Century
4th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
கருவூர் தேவர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி மரம்
இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது. மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி சற்று உயர்ந்த பாணம் சதுர ஆவுடையார் அமைப்பு. குடி - ஊர் வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது. அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. சண்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் மண்டபத்தில் உள்ளது. இக்கோயில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர். நித்திய வழிபாடுகள் நன்கு நடைபெறுகின்றன. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள். மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் இத்தலத்தில் சிறப்புடையது. அண்மையிலுள்ள கீழ்வேளூர், கச்சனம், திருத்துறைப்பூண்டி முதலியவை திருமுறைத் தலங்களாகும். தமிழ் நாடு - திருவாரூர் - கீழ்வேளூரிலிருந்து கச்சனம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. மேலும், திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. பிரதான சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில் வரை பேருந்து செல்லும்.
திருக்கோயிலில் வாயு முலையில் அமைந்துள்ளது.
திருக்கோயிலின் உட்புறத்தில் கன்னி மூலையில் அமைந்துள்ளது.
வேததீர்த்தம் அல்லது வேதபுஷ்கரணி இது சன்னதிக்கு மேற்கு பகுதியில் உள்ளது. வெப்பம் தீர்க்கும் மூலிகைகள் இந்த குளத்தை சுற்றி இருக்கிறது. இத் தீர்த்தத்தில் ஐப்பசி மாத பிறப்பிலும் மாசி மாத பௌர்ணமியிலும் வைகாசி மாத பௌர்ணமியிலும் வைகாசி பொர்ணமிலும் முறைப்படி ஸநானம் செய்து அருள்மிகு வேதபுரீஸவரரை வணங்கினால் சரீர சுகம் பெறும்.


