அருள்மிகு வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம், வேதாரண்யம்

Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
அறுங்கோண வடிவம்
Vimanam Type
கல்விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி மரம்
நான்கு வேதங்களும் மனித உருவில் வந்து இத்திருக்கோயிலை வழிபட்டுள்ளன. இத்தலத்தில் இறைவனின் கருவறையில் அணைய இருந்த விளக்கின் தீபத்தில் எலியின் மூக்கு சுட்டிட சுடர்விட்டு எரிய காரணமாக இருந்த அந்த எலியை மறுபிறவியில் இறைவன் மகாபலீஸ்வர சக்கர வர்த்தியாக்கிய தலம் இத்தலமாகும். அகஸ்திய மாமுனிவருக்கு இத்தலத்தில் திருமணக்கோல காட்சி கொடுத்த சிறப்புடையது. இராமபிரானால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட விஷ்ணு துர்க்கை அமையப்பெற்ற தலமாகும். இத்தலத்தில் உள்ள அம்மனது சிரிப்பில் இருந்து வரும் ஓசை, வீணையில் இருந்து எழும்பும் ஓசையைவிட மிக அற்புதமாக உள்ள காரணத்தினால் இத்தலத்தில் சரஸ்வதி வீணையில்லாமல் வீற்றிருக்கும் சிறப்புடைய தலமாகும்.
ராமபிரானுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷத்தை தனது வலது காலால் எட்டி உதைத்து தோஷத்தை நிவர்த்தி செய்தார்
இந்த சன்னதியில் அமைந்துள்ள அம்மனின் புன்னகையில் இருந்து வரும் ஒலியானது சரஸ்வதியின் வீணையில் இருந்து வரும் ஒலியைவிட இனிமையானது
மணிகர்ணிகை
மராட்டியர்கள் கால மூலிகை ஓவியங்கள் இத்திருக்கோயிலில் வரையப்பட்டுள்ளன.
சுவாமி சன்னதியின் முன்புறம் மேற்கூரையில் 24 நட்சத்திரங்கள் மற்றும் 12 இராசி அதிபதிகளின் சிற்பம். சுழலும் தன்மையுடைய ஒரே கல்லில் ஆன தூண்கள் இரண்டு
அன்னதான நன்கொடை தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 நபர்களுக்குக் கட்டணமாக ரூ 2000/- செலுத்தி பக்தர்கள் அன்னதானத் திட்டத்தில் பங்கேற்கலாம். அன்னதானக் கட்டளைக்காக ரூ 30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்) முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டியினைக் கொண்டு திருமண நாள், பிறந்த நாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் இவற்றில் நன்கொடையாளர் விரும்பும் ஏதேனும் ஒரு நன்னாளில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமான வரிவிலக்கு (80) உண்டு.
இத்திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
வினாயகர் சன்னதி அருகில் மேல்நிலை தொட்டி தண்ணீர் வசதி உள்ளது
வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்காக சக்கர நற்காலி சேவை வழங்கப்படுகிறது




