
Century
19th - 20th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
1. இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி மற்றும் காட்டேரி அம்மன்கள் முப்பெரும் தேவிகளாக ஒரே தளத்தில் வீற்றிருக்கும் அரிய தலம். இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது சிறப்பு. 2. மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள்( மாரி மற்றும் காளி) ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள் 3. இங்குள்ள நவகிரகங்கள் தம்பதி சமேதரர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
தேர்த்திருவிழா மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 33 நாட்களுக்கு நீண்ட பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது.இத்திருவிழா நாட்களில் துர்க்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி,ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன், பகவதி என பல்வேறு திருக்கோலங்களில் ஆதிபராசக்தி எழுந்தருளி திருவீதி உலா நடந்துவருகிறது.தேர் வீதி உலா வரும்போது பக்தர்கள் உப்பு அள்ளிவீசுகின்றனர்.உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் முழுமையாக நீங்கி அம்மன் அருள் பெறுவதாக நம்பிக்கை.
இங்குள்ள காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பில்லி சூனியம், பிணி மற்றும் செய்வினையிலிந்து நிவாரணம் கிடைக்கும்.
இத்திருக்கோயிலில் உப சன்னதியாக ஸ்ரீகாட்டேரி அம்மன் சன்னதி அமைந்துள்ளது, பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரிசையில் நின்று பயபக்தியோடு காட்டேரி அம்மனை வழிபடுவதை இங்கு காண முடிகிறது, குழந்தைகள் இல்லாதவர்கள்இ குழந்தைப் பேறு வேண்டி காட்டேரி அம்மன் சந்நிதியில் தொட்டில் கட்டி வழிபாடு செய்வர், அதுபோன்று தங்கள் நோய் தீர வேண்டிக் கொள்பவர்களும் ஏராளம், , தங்கய்ள வேண்டுதல் நல்லபடி நிறைவேறியதும் காட்டேரி அம்மனுக்குக் கோழிக்குஞ்சும், கருப்புப் புடவையும் காணிக்கையாக கொடுக்கின்றனர், மேலும், இத்திருக்கோயிலில் திருஷ்டிநீங்குவதற்கும் பக்தர்கள் உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வருகை தருவார்கள், ஸ்ரீகாட்டேரி அம்மனை குல தெய்வமாகவும் வணங்குகிறார்கள்
இங்குள்ள நவகிரக நாயகர்ள் தம்பதி சமேதரர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்
இத்திருக்கோயிலில் பொது நன்கொடை மற்றும் அன்னதான நன்கொடைகளை பக்தர்கள் செலுத்துவதற்கு ஏதுவாக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் அன்னதான திட்டம் நடைப்பெற்று வருகிறது, மேற்படி திட்டத்தில் நாள்தோறும் நூறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, அன்னதானத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது, மேற்படி திட்டத்தில் சாப்பாடு, சாம்பார், ரசம்,பொறியல், மற்றும் மோர் வைக்கப்படுகிறது
பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேவார்த்திகள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது





