அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை வட்டம்

Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் காலத்தில் புதுக்கோட்டை மாமன்னர்களின் குல தெய்வமாக அருள்மிகு பிரகதாம்பாள் வழிபாடு விளங்கியது. அக்காலத்தில் பெரிய கோயில் என்று விளங்கியது. புதுக்கோட்டை மாமன்னர்கள் தங்கள் பிரகதாம்பாள்தாஸ் என்று பட்டம் சூட்டிக் கொண்டார்கள். காமதேனு சாபவிமோசனம் அடைந்த ஸ்தலம் ஆகும். கி.பி.6ம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்திருக்கோயில் குடவரைக்கோயிலாகும். பல கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் காணப்படுகின்றன. புதுக்கோட்டை மன்னர் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட அம்மன்காசு நாணயத்தில் அருள்மிகு பிரகதாம்பாள் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அம்மனுக்கு அரைக்காசு அம்மன் என்ற பெயரும் நடைமுறையில் உள்ளது. காமதேனு (கோ) தனது காதில் (கர்ணம்) கங்கை தீர்த்தம் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தாக ஐதீகம். எனவே இத்திருக்கோயில் அமைந்த பகுதிக்கு திருகோகர்ணம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. காமதேனு பசு தனது கொம்பால் பாறையைக் கீறி ஏற்படுத்திய சுனையில் உள்ள எப்போதும் வற்றாத சுனை நீர் தற்போது அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவது தனிச்சிறப்பாகும்.
திருக்கோயிலில் இரண்டு திருக்குளங்கள் உள்ளன. இத் திருக்கோயிலின் திருக்குள திருப்பணி நடைபெற்று வருகிறது.
சிவபெருமான் காமதேனு பசுவிற்கு இந்திரனால் ஏற்பட்ட சாபத்தை நீக்கி காட்சி கொடுத்தது
இத்திருக்கோயிலில் உள்ள சிற்பக்கலைகள்
இத்திருக்கோயிலில் பொது நன்கொடை வழங்கும் வசதி உள்ளது
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலில் மொத்தம் 4 கழிப்பறையுடன் கூடிய குளியலரை ஆண், பெண் இருபாலருக்கும் உள்ளது.
இத்திருக்கோயிலில் இரண்டு திருக்குளங்கள் உள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.





