Home/Temples/TN/Ramanathapuram/Arulmigu Kuvalathadanganni Amman Temple, Rathanur - 623401
hrce

Arulmigu Kuvalathadanganni Amman Temple, Rathanur - 623401

அருள்மிகு குவளந்தடங்கன்னியம்மன் திருக்கோயில், Rathanur

Ramanathapuram, TN குவளைதடங்கன்னியம்மன்
Arulmigu Kuvalathadanganni Amman Temple, Rathanur - 623401 — image 1
1 / 4
Also known as:குவளைதடங்கன்னியம்மன்

History & Architecture

Praised By

இல்லை

Sanctum Shape

சதுர வடிவம்

Pooja Timings

காலசந்தி பூஜை07:00 AM to 10:00 AM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனையே நினைந்து நெகிழ்ந்து, அன்பே நினைந்து ஊற்றெழும் கண்ணீரானால் உடம்பு நனைந்து, காதலாகி கண்ணீர் மல்கி பக்தி செய்யும் மாவேலிச் சக்ரவர்த்தி என்பபார் வடக்கில் ஆண்டு கொண்டிருந்தார். கோடிமாதவங்கள் செய்து குன்றினோர் தம்மை எல்லாம் வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு தேடிமால் செய்த கோயிலாகிய இராமேஸ்வரத்தை தரிசனம் செய்ய எண்ணித் தனது குதிரையிலேயே புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். தினமும் முக்காலமும் இறைவனை வழிபாடு செய்யும் உத்தமராகிய சக்ரவர்த்தி ஒருநாள் இரவு ஒரு வனத்திலுள்ள மரத்தடியில் தங்கினார் கதிரவன் எழக்காலை விழிக்க, புள்ளினம் ஆர்த்திட, அதிகாலைப் பொழுதில் ஆண்டவனைப் பூசிக்க தொடங்கினார் சக்ரவர்த்தி மனம், வாக்கு, உடலால் பூசையை ஒருங்கே செய்து கொண்டிருந்த போது பூஜைபாத்திரங்களில் ஒன்றான தீர்த்த குவளை திடீரென மறைந்து விட்டது. அது மறைந்து காரணத்தை இறைவனிடம் மனமுருகிக் கேட்டபோது பூஜைக்குவளை மீண்டும் வந்தது, தொடர்ந்து வானில் ஒரு அசரீரியும் கேட்டது பக்தி நிரம்பிய மாவேலி சக்ரவர்த்தியே புனிதமாக நீ பூஜை செய்யும் இடத்தில் உள்ள மரத்தின் அடியில் கன்னியம்மனாகிய நான் இருக்கிறேன். உனது பாக்கியத்தால் உலகத்தோர் அறியும் வண்ணம் வெளிப்படப்போகிறேன். எனவே என்னையும் நீ பூஜை செய்வாயாக என்றது சக்ரவர்த்தி மகிழ்ந்து அன்னையின் கருணையை வியந்த நன்றி செலுத்திவீழ்ந்து வணங்கி அருகில் இராதானூரில் உள்ள ஒச்சவழி மக்களை அழைத்து அம்மனை வெளிக்கொணர்ந்து பூஜித்து மகிழ்ந்தார். தொடர்ந்து தனது யாத்திரையை தொடர வேண்டிய சூழ்நிலையில், அங்கிருந்து ஒச்ச மக்களையே பட்டர்களாக நியமித்து பூஜைசெய்து வரும்படி கோரினார். மேலும் சக்ரவர்த்தி நஞ்சை, புஞ்சை நிலங்கள் வழங்கியும் சென்றார் அவற்றைக் கொண்டு இன்றும் அச்சந்ததினர் பூஜை செய்து வருகின்றார்கள் என நாம் அறிகின்றோம்.

More Temples Nearby

View all →