Home/Temples/TN/Ramanathapuram/Arulmigu Mangalanathaswami Temple, Thiruuthirakosamangai - 623533
Heritage Templehrce

Arulmigu Mangalanathaswami Temple, Thiruuthirakosamangai - 623533

அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில், Thiruuthirakosamangai

🕉️ மங்கலநாதர் Ramanathapuram, TN மங்களநாயகி
Arulmigu Mangalanathaswami Temple, Thiruuthirakosamangai - 623533 — image 1
1 / 11

History & Architecture

Century

1st நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பாண்டியன்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

அப்பர் (திருநாவுக்கரசு)

Agama Tradition

காரண ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

இதர விமானம்

Sacred Tree (Sthalavriksha)

இலந்தை மரம்

Pooja Timings

திருவனந்தல் பூஜை06:00 AM to 07:00 AM IST
விளா பூஜை07:00 AM to 08:00 AM IST
காலசந்தி பூஜை09:00 AM to 09:30 AM IST
உச்சிக்கால பூஜை12:00 PM to 12:30 PM IST
சாயரட்சை பூஜை05:00 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை08:00 PM to 08:30 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

திருவாசகப் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற திருத்தலம். சிவனார் ஊர் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளை கொண்ட அருள் தரும் மங்களநாயகி அம்பாளுடன் அருள் பாலிக்கும் மங்களநாதசுவாமி கோவில் மிகவும் தொன்மையானதாக அமைந்துள்ளது. ஆலயத்தின் வடக்கில் ஐந்தரை அடி உயர மரகத நடராஜருக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. நடராஜப் பெருமான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் இருக்கும் மரகத நடராஜரை, மார்கழி மாத திருவாதிரை தினத்திற்கு முந்தைய நாள் நடக்கும் அபிஷேகத்தின் போது, பச்சை வடிவாய் மரகத மேனியனாய் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு காணக் கிடைக்காத காட்சியாகும்.

தல விருட்சம்

இலந்தை மரம் தொன்மையான இக்கோயிலில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய இலந்தை மரம் (தல விருட்சம்) உள்ளது. தலமரம் இலந்தை. இலவந்திகை என்னும் சொல்லே மருவி இலந்தையானது எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால இலவந்திகைப்பள்ளி இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.

புனித தீர்த்தம்

-

Temple Tank

அக்கினி தீர்த்தம்

-

Wall Paintings

அம்மன் சன்னதி

அம்மன் சன்னதி மற்றும் மரகத நடராஜர் சன்னதியில் மூலிகை ஓவியங்கள் உள்ளது

Sculptures

சிற்பங்கள்

மூலவர் சதுர ஆவுடையார். உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். பிரகார அழகு இராமேஸ்வரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கூத்தப்பிரான் நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் முழுவதும் மரகதத் திருமேனி. வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகர், இடப்பால் திரும்பி உமாமகேசுவரர் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. உமாமகேசுவரர் சந்நதிக்கு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிரகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்த மர உபதேசக் காட்சி சந்நதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்த மரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அமைந்துள்ளது. ஒரே லிங்கத்தில் தன்னையும் சேர்த்து ஆயிரம் லிங்கமாக காட்சியளிக்கும் சகஸ்ர லிங்கம். ஒரு ரூபாய் நாணயத்தை விட சிறிய அளவிலான யானையின் சிற்பம் அற்புதமான படைப்பு.

Services

நன்கொடை

நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது

அன்னதானம்

நாள் ஒன்றுக்கு சுமார் 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது

Facilities

கழிவறை வசதி

ஆலய முன்புறம் ஆண்கள் பெண்கள் கழிப்பறை தனித்தனியே உள்ளது

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

-

More Temples Nearby

View all →