அருள்மிகு சுப்பிரமணியசுவாமி என்கிற பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி, கீழ்மின்னல்

Century
14th நூற்றாண்டு
Vimanam Type
திராவிடம்
தவத்திரு. பாலமுருகனடிமை சுவாமிகள் 1968 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் நாள் இத்திருக்கோயில் முருகன் ஆட்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்து வருகிறார்.
இத்திருக்கோயில் அடிவாரத்தில் மலை இடதுபுறத்தில் அருள்மிகு விஜய துர்கை அம்மன் (ம) வராஹி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இத்திருதளத்தில் பஞ்சமிக்கு தேங்காவில் விளக்கு ஏற்றுவது சிறப்பாகும். சிறப்பு அலங்காரம் மற்றும் விளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெறும்.
இத்திருக்கோயில் அடிவாரத்தில் முத்த கடவுளான அருள்மிகு வரசித்தி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
இக்கோயிலின் திருக்குளம் மலை அடிவாரத்தில் அமையப்பெற்ற அறுகோண தெப்பக்குளம் என வழங்கப்படுகிறது. இத்திருக்குளம் அறுகோண வடிவில் கருங்கற்களால் ஆன படிக்கட்டுகளால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தில் ஆண்டு முழுவதும் நிலைத்து நிற்கும் நீரின் நடுவில், அறுபடை வீடு முருகப்பெருமான கருங்கற்களால் வடிவமைக்கப்பட்ட நீராழி மண்டபம் அமைந்துள்ளது. மாத கிருத்திகையின் போது பக்தர்களால் தீபஆர்த்தி காண்பிக்கப்படும். தினசரி மாலை 05.30 மணி முதல் 07.30 மணி வரையிலும், விசேஷ நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையிலும் மாலை 05.30 மணி முதல் 07.30 மணி வரையிலும் தெப்பக்குளம் பக்தர்கள் தரிசனம் செய்திட திறந்திருக்கும்.
பாலமுருகன் வள்ளி தெய்வானை
இத்திருக்கோயிலில் வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் தினமும் 200 நபர்களுக்கும், விஷேச நாட்களில் 300 நபர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு 43 அறைகள், குளியலறை, கழிவறை, பாதுகாப்பு அறை, குடிநீர் வசதிகள் உள்ளன மற்றும் திருக்கோயில் சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணங்களில் திருமண மண்டபங்கள் -3 உள்ளன.





