
Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Poet Saint
புகழ்த்துணை நாயனார்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
துவித்தலம் விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வ மரம்
ஆதிசேஷன் பூஜித்து வரம் பெற்ற விஷேச திருத்தலம் ஆதலால் இத்திருத்தலத்தில் ராகு கேது நாக தோஷம் நீங்க பரிகாரம் செய்ததால் தோஷ நிவர்த்தி யாகும் என்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திருத்தலத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அம்பாள் சன்னதியில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் தனியாக கால பைரவர் அமைந்துள்ளது. இத்தலம் அப்பர், சம்மந்தர், திருநாவுக்கரசர் அவர்களால் பாடல் பெற்றது. இத்திருத்தலத்தில் மாதம் இருமுறை வரப்படும் பிரதோஷ காலங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. மாத பொளர்ணமி பூஜைகளும் நடைபெறுகின்றது. மாதாமாதம் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. மேற்படி ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. ஆதிசேஷன் பூஜித்து வரம் பெற்றதாகவும் தெரியவருகிறது. பழமையான சிவப்பதிகளுள் மூன்ற குளப்பதிகள் சிறந்திருந்தன என்பது திருஞான சம்மந்தரின் வளைகுளமும் தனிக்குளமும், நல்இடைக்குளமும், திருக்குளமும் என்ற பாட்டால் தெரிய வருகின்றது.
1.அருள்மிகு சித்தி விநாயகர் 2.அருள்மிகு சொர்ண வள்ளி அம்பாள் 3.அருள்மிகு மகா கணபதி 4.அருள்மிகு காசி விஸ்வநாதர் விசாலாட்சி 5.அருள்மிகு சண்முகர் 6.அருள்மிகு வள்ளி, தேவயானை, சுப்பிரமணியர் சன்னதி 7.அருள்மிகு மகா இலட்சுமி 8.அருள்மிகு கால பைரவர் 9.அருள்மிகு நடராஜர் சிவகாமி
திருக்கோயில் மேற்பகுதியில் அமைந்துள்ளது. பக்தர்கள் மற்றும் திருக்கோயில் பூஜைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருக்கோயில் அருகாமையில் அமைக்கப்பட்டு திருக்கோயில் பணியாளர்கள் மூலம் தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் அருகாமையில் அமைக்கப்பட்டு திருக்கோயில் பணியாளர்கள் மூலம் தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.





