
Century
13th நூற்றாண்டு
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Vimanam Type
இதர விமானம்
தல விருட்சம் வில்வம்
சிவப்பெருமானுக்கும் பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்த இடம் என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்த திருமண ஸ்தலமாகும்.
திருக்கோயிலுக்கு கிழக்கே இரண்டு திருக்குளங்கள் உள்ளன. ஒன்று 180 அடிச் சதுரமுள்ள சிவந்த கற்களால் கட்டப்பட்ட தெப்பக்குளம் உள்ளது, கருங்கற்களான 36 நந்திகள் இந்த சுவர்களின் மேல் இருக்கின்றன.குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. மற்றொரு 100 அடி சதுர சிறிய திருக்குளம் சிவந்த கற்களால் கட்டப்பட்ட மற்றும் 20 நந்திகள் இந்த சுவர்களின் மேல் இருக்கின்றன
மஹா மண்டபத்தின் தூண்கள் அழகிய சிற்ப்பச் சிறப்பு வாய்ந்தவை. மண்டபத்தின் மேற்கூரையில் 7 அடி சதுரமுள்ள ஒரே கல்லில் விரிந்த தாமரை செதுக்கப்பட்டுள்ளது. தாமரை இதழ்களைக் கிளிகள் கொத்துவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. தாமரை பூவின் நடுவேயுள்ள மொட்டின் மீது ஒரு கல்வளையம் உருளவும் செய்கிறது. ரிஷி பத்தினி, பார்வதி, பிச்சாடனார், மோகினி அவதாரம், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், ஜெயமுனிவர், ஹயக்கீரிவர் , ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, சித்தர், சிவசக்தி கோபம், சிவசக்தி சாந்தம், திருமால்,அகோரவீரபத்திரர், அக்னி வீரபத்திரர், ஐயனார், மாணிக்கவாசகர், காஞ்சி காமட்சி, மன்மதன், ரதி, ஞானசம்பந்தர், அப்பர் மற்றும் 63 நாயன்மார்களின் கல்சிற்ப்பங்களும் உள்ளது,
நன்கொடையாளர்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு உரிய இணையத்தல இரசீது வழங்கப்படுகிறது.
இணையத்தள சேவைகள்
திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் உரிய குத்தகை நிர்ணயிக்கப்பட்டு கட்டிடம், மணை, நிலங்களுக்கு வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அன்னதானம் நன்கொடை , அன்னதான உண்டியல் , உபய வரவு, திருமணம் போன்ற வசதிகள் உள்ளது.
திருக்கோயிலில் தினமும் மதிய வேளையாக முப்பது நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருக்கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.
திருக்கோயிலில் பக்தர்களுக்கு இலவச கழிப்பறை வசதி உள்ளது.
பொது மக்களுக்கு குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.





