அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், Karaikudi

Century
19th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
கிழக்கு பார்த்த கோவிலாகும். புற்று மண்ணாலான ஒரே பீடத்தில் ஐந்து புற்று உருவம் வைத்து அருள்மிகு முத்தாலம்மன் முலகருவரை , முத்தாலம்மன் , மனோன்மணி சக்தி , இட்சசக்தி , க்ரியாசக்தி ,மற்றும் ஞானசக்தி வடக்கு நோக்கி பார்த்த மூலகருவறை ஆகும் . வடக்கு நோக்கி ஒரே பீடத்தில் முத்துப்பேச்சி மற்றும் முத்துராக்காச்சி பெயருடன் மூலகருவறை உள்ளது . தெற்கு நோக்கி ஒரே பீடத்தில் முத்துக்கருப்பன் என்ற பெயருடன் புற்று மண்ணால் செய்த மூலகருவறை அனைத்து மூலகருவறைகளும் வெட்ட வெளியில் அமைந்து உள்ளது . உலகம் இயங்குவதற்கு பஞ்சபூதங்களை மூலகாரணமாக உள்ளது .முத்தாலம்மனையும் பஞ்சபூத சக்தியாக உருவாக்கி இருப்பது சிறப்பான நிலையாகும் .
அருள்மிகு முனீஸ்வரன் சுவாமி சன்னதி அமைந்துள்ளது.
அருள்மிகு முத்தாளம்மன் திருக்கோயிலில் அருள்மிகு முத்துவிநாயகர் சன்னதி உள்ளது
தெற்கு நோக்கி ஒரே பீடத்தில் முத்துக்கருப்பர் என்ற பெயருடன் புற்று மண்ணாலான மூலகருவரை உள்ளது .
திருக்குளம் நல்ல நிலையில் உள்ளது . நான்கு பக்கமும் இரும்பு முள்வேலி போடப்பட்டு உள்ளது . திருக்குளம் சுத்தமாக பராமரிக்க பட்டு வருகிறது . தடுப்பு சுவர் உள்ளது . அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி பங்குனி பெருவிழாவிற்கு இக்குளத்தில் நீராடிய பின்பு தான் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது ஐதீகம் .
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 14.10.2016 தொடங்கபட்டு அன்று முதல் நாள்தோறும்50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபடுகிறது. இத்திருக்கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கு நாளொன்றுக்கு1250/ - செலுத்த வேண்டும் .
அன்னதானம் 50பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது சுகாதாரத்துடன் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது





