அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம்

Century
18th நூற்றாண்டு
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேம்பு
குழந்தை பாக்கியம் வேண்டி மற்றும் திருமண தடை நீங்க தல விருட்சமான ஈச்ச மரத்தில் தொட்டில் மற்றும் மாங்கல்ய கயிறு நேற்தி கடனாக செலுத்தப்பட்டு வருகிறது
அம்மை நோய் நிவர்த்தியாகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்கும்
முருகன் சன்னதி உள் பிரகாரத்தில் வட மேற்கு திசையில் அமைந்துள்ளது.
விநாயகர் சன்னதி உள் பிரகாரத்தில் வட மேற்கு திசையில் அமைந்துள்ளது.
ஆதி முத்துமாரியம்மன்
கருப்பர் சன்னதி திருக்கோயிலின் உள் பிரகாரத்தில் தென் கிழக்கு திசையில் உள்ளது.
பைரவர் சன்னதி திருக்கோயிலின் உள் பிரகாரத்தில் வட கிழக்கு திசையில் உள்ளது
தெப்ப குளத்தின் தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளில் திருக்குளத்தின் படிகள் சம அளவில் உள்ளன. திருக்குளத்தின் நன்கு திசைகளில் உள்ள படிகளுக்கு திருக்குளத்தின் உடபுறம் படிகளின் சுற்றி கம்பி வேலி பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள்ளது. திருக்குளத்தினை சுற்றி சுற்று சுவர் அமைத்து அதன் பாதுகாப்பு கருதி கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தின் நடுவே உயர்தூண் மின்சார விளக்கு அமைக்கப்பட்டுள்ளது
அருள்மிகு முத்துமாாியம்மன் திருக்கோயில் திருக்குளத்தில் பக்தா்கள் குளித்துவிட்டு ஆயிரங்கன்பானை அக்கினிச்சட்டி கரும்புத் தொட்டில் ஆகிய நோ்த்திக்கடனை செலுத்தவாா்கள். மேற்படி திருக்கோயில் முடிக்காணிக்கை செலுத்திவிட்டு தெப்பத்தில் குளித்துவிட்டு சாமி தாிசனம் செய்து வருவாா்கள்.
திருக்கோயில் கடந்த 15,09,2002 ம ஆண்டு அன்னதானம் துவங்கப்பட்டு இன்றளவு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது, தானத்தில் சிறந்த தானம் அன்னதானம், இத்திருக்கோயிலில் அன்னதானம் தினசரி 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது,100 பேர் (ஒருநாள்) எனில் ருபாய் 2500/ ம் நிரந்தர வைப்பு எனில் 25000/ ம் (வருடத்தில் ஒரு நாள் ) அன்னதானம் வழங்கப்படும் நன்கொடையாளர்கள் வருமானவரி விலக்க(80) பெற இயலும்,
தன்னார்வலர் தொண்டர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் பிரதி வாரம் புதன் கிழமை அன்று உழவார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது
அம்பாள் சன்னதி, அன்னதான கூடம் மற்றும் கோவில் அலுவலக கட்டிடம் ஆகியவற்றில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உட்கார்ந்து கழிப்பறை கழிப்பதற்கு வசதி உள்ளது. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
இத்திருக்கோயிலுக்கு அம்பாள் தரிசனத்திற்கு மாற்று திறனாளி மற்றும் முதியோர்களுக்கும் திருக்கோயிலுக்குள் சென்று அம்பாள் தரிசனம் செய்ய சக்கர நாற்காலி அமைக்கப்பட்டுள்ளது மேலும் திருக்கோயிலின் படிகளில் இலகுவாக படி ஏற்றத்திற்கு சாய்வு பலகை அமைக்கப்பட்டுள்ளது





