Home/Temples/TN/Sivagangai/Arulmigu Thiruthalinatha Swamy Temple, Thiruppathur - 630211
Heritage Templehrce

Arulmigu Thiruthalinatha Swamy Temple, Thiruppathur - 630211

அருள்மிகு திருத்தளிநாதசுவாமி திருக்கோயில், Thiruppathur

🕉️ திருத்தளிநாதர் Sivagangai, TN சிவகாமி
Arulmigu Thiruthalinatha Swamy Temple, Thiruppathur - 630211 — image 1
1 / 5
Also known as:கொன்றைவனம்

History & Architecture

Century

7th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பாண்டியன்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

அப்பர் (திருநாவுக்கரசு)

Vimanam Type

Sugantha விமானம்

Sacred Tree (Sthalavriksha)

கொன்றை

Pooja Timings

திருவனந்தல் பூஜை05:30 AM to 06:30 AM IST
காலசந்தி பூஜை08:30 AM to 09:00 AM IST
உச்சிக்கால பூஜை12:30 PM to 01:00 PM IST
சாயரட்சை பூஜை05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை08:00 PM to 08:30 PM IST

Temple Speciality

பிரார்த்தனை

திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர். இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர். பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார். பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன. மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள். பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர். தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்

Sub Shrines

குரு தட்சினமூர்த்தி

-

அகத்தியர் லிங்கம்

-

விஷ்ணு துர்கா

-

யோகா நரசிம்மர்

-

முருகன் சன்னதி

கார்த்திகை திருவிழா மிக சிறப்பாக நடை பெரும்

கணபதி

-

யோகா பைரவர்

சம்பா சஷ்டி திருவிழா மிக சிறப்பாக நடை பெரும்

திரு நாகேஸ்வரர் சன்னதி

-

நவ கிரக சன்னதி

-

Temple Tank

சீதலி தெப்பம்

வைகாசி விசாகம் அன்று தெப்ப திருவிழா மிக விமர்சியாக நடை பெரும்

Sculptures

நடராஜர் சன்னதி

நடராஜர் சன்னதி மண்டபம் கல் சிற்பங்களால் கட்டப்பட்டது

நடராஜர் சன்னதி மண்டபம்

நடராஜர் சன்னதி மண்டபம் கல் சிற்பங்களால் கட்டப்பட்டது

நாகேஸ்வரர் சன்னதி

சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்கள் நாகேஸ்வரர் சன்னதியில் அமைத்துள்ளன

Services

நன்கொடை

நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அன்னதானத்திற்கு திட்டத் நன்கொடைக்கு வருமான வரித்துறையின் வரிவிலக்கு சான்றிதழ் (80ஜி) பெறப்பட்டுள்ளது.

அன்னதானம்

நாள்தோறும் இத்திருக்கோயிலில் 50 நபர்களுக்கு என்ற திட்டத்தின் மூலம் அன்னதானம் நடைபெற்று வருகிறது

Facilities

குளியல் அறை வசதி

இரு பாலருக்கும் தனி தனியாக குளியலறை வசதி உள்ளது

கழிவறை வசதி

இரு பாலருக்கும் தனி தனியாக கழிப்பறை வசதி உள்ளது

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

குடி நீர் வசதி உள்ளது

More Temples Nearby

View all →