அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், Ariyakkudi

Century
17th நூற்றாண்டு
Agama Tradition
வைகாணசம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பின்னை மரம்
இத்திருத்தலத்தில் திருமணம் ஆகாதவர்கள் பிரார்த்தனை செய்தால் கூடிய விரைவில் திருமணம் கைகூடும். மேலும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மூளை கருடனுக்கு சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வேண்டின காரியங்கள் வேண்டிய படி சித்தி ஆகும்
திருக்கோவிலின் சன்னதியில் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீராமர் லக்ஷ்மணர் சீதை ஆஞ்சநேயர் முதலியவர்கள் எழுந்தருளி இருக்கின்றார்கள் ஸ்ரீ ராமசாமி உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்
திருக்கோயிலின் இச்சன்னதியில் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ திருமங்கை மன்னன் ராமானுஜர் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் எழுந்தருளி இருக்கின்றார்கள்
08:59, 06/05/2023 : ஆண்டாள் சன்னதியில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூரத் திருவிழா அன்று 5 நாட்கள் நடக்கும் திருவிழா நாட்களில் ஸ்ரீனிவாச பெருமாள் காலையில் ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருளியிருந்து மாலை புறப்பாடு கண்டு அருளி ஆஸ்தானம் சேர்வார் மார்கழி மாதம் 30 நாட்களும் ஆண்டாளுக்கு விசேஷமான பூஜைகள் நடக்கும்
இத்திருத்தலத்தில் திருப்பதி திருச்சானூரிலிருக்கும் அலமேலு மங்கை தாயார் எழுந்தருளியிருக்கின்றார் கல்யாண கோலத்தில் காட்சி அளிக்கும் இத்தாயாரை வழிபடத்தின் மூலம் திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் கிட்டும் இழந்த செல்வங்கள் அனைத்தும் மீண்டும் கிடைக்கப்படும்
அலர்மேலு மங்கை தாயார், ஆண்டாள், இராமர், தேசிகன், கருடன் மற்றும் மூலைகருடன்
திருக்கோவிலின் வெளியில் அமைந்திருக்கும் திருக்குளத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு வைகாசி மாதம் தெப்ப உற்சவம் நடைபெறும்
திருக்கோவிலின் பள்ளியறை வெளியே பச்சிலையை ஓவியங்கள் மிக அழகாக காட்சியளிக்கின்றன
துவார பாலகர்
திருக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு அன்னதானம் துவங்கப்பட்டு இன்றளவும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது தானத்தில் சிறந்த தானம் அன்னதானம், உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்ற வாக்கிற்கிணங்க இத்திருக்கோயிலில் அன்னதானம் தினசரி 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது 50 பேர் ஒரு நாள் எனில் ரூ 1500/-ம், நிரந்தர வைப்பு எனில் ரூ.25,000/-ம் வருடத்தில் ஒரு நாள். அன்னதானம் வழங்கப்படும் நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80 பெற இயலும்.
த்திருக்கோயிலில் மரத்தேர் மிகச் சிறப்பான ஒன்றாகும் திருத்தேரில் உள்ள மர சிற்பங்கள் மிகவும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் வைகாசி மாதம் திருவிழா ஒன்பதாம் திருவிழாவில் திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள்
திருக்கோயிலில் சமய நூலகம் பயன்பாட்டில் உள்ளது இந்து சமய நூல்கள் புராணங்கள் இதிகாசங்களை பற்றிய தொகுப்புகள் இந் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன
திருக்கோயிலில் பெருமாள் சன்னதியில் மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டிக் கொள்ளலாம் திருக்கோவிலின் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் திருமண சடங்குகள் செய்து கொள்ளலாம்
திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து தரிசனம் செய்ய சக்கர நாற்காலிகள் இரண்டு பயன்பாட்டில் உள்ளது
திருக்கோவிலில்50 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆர்ஓ வாட்டர் பயன்பாட்டில் உள்ளது
-
திருக்கோயிலில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
-





