
Century
14th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Agama Tradition
மகுட ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஒரு நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மகிழமரம்
இத்திருக்கோயில் இருவாலுக ஈசர் என்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் என்றும் சிவத்தலமாக இருந்த போதிலும் திரு இலஞ்சி குமாரர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலிக்கிறார்.அம்மை அப்பருடன் எழுந்தருளி உள்ளதால் இங்கு திருமணம் செய்வது விசேஷம். ஆகவே இங்கு அதிக அளவில் திருமணம் நடப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருள் உண்டு.மேலும், முருகப்பெருமான் ரிஷிகளின் வேண்டுகோளின் படி வரத்தை இன்றும் கொடுத்தருள்கிறார்.இத்தலத்து திருவிலஞ்சிக்குமாரர் வரதராஜப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.
இலஞ்சிக்குமாரா்
இத்திருக்கோயிலில் உட்புறம் மூலவர் சன்னதி அருகில் இருவாலுக ஈஸ்வரர் சன்னதிஉள்ளது. இருவாலுக ஈஸ்வரர் அகத்தியரால் வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்டலிங்கமாகும். பிரதோஷ வழிபாடு மாதத்தில் இருமுறை நடைபெறும். விமானம் -ஒருநிலைவிமானம் கருவறை-முக்கோண வடிவம் சிறப்பு-பிராத்தனை
இத்திருக்கோயிலில் அன்னதானத்திட்டம் மாண்புமிகு முதல்வர் அறிவுரையின்படி2006 ல் இருந்து நடைபெற்று வருகிறது. மேற்படி அன்னதானத்திட்டம் சிறப்பாகநடைபெற்று வருகிறது. அன்னதான திட்டத்திற்கு 80ஜி பெறப்பட்டுள்ளது. அன்னதானநன்கொடை டிக்கட்டுகள் ரூ.500,ரூ300,ரூ200,ரூ100,ரூ50 வசதி உள்ளது. அன்னதானதிட்டத்தில் வருடந்தோறும் கட்டளைக்கு தொகை செலுத்தி வருடத்தில் ஒருநாள்அன்னதானம் வழங்கும் திட்டம் உள்ளது. அன்னதான கட்டளைக்கு தொகைரூ.25000/-.தினமும் 50நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அர்ச்சனை டிக்கட்,பன்னீர் டிக்கட், அபிஷேகம்,வெள்ளிஅங்கி டிக்கட், மாலை அணிதல் டிக்கட்,பால்குடம் டிக்கட் ,சிறப்பு ஹோமம் டிக்கட் அனைத்தும் சேவைகள் உள்ளது.உபயரசீது சேவை உள்ளது.
மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி இங்கு உள்ளது.
.கோயில் உட்புறம்டிக்கட் கவுண்டா்அருகில்உள்ளது.சுத்திக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது
குளியல்அறை
கழிப்பறை வசதி
சக்கரநாற்காலி வசதிஉள்ளது





