
Century
11th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
புன்னை மரம்
சைவமும் வைணவமும் ஒன்றே என உணர்த்திய ஸ்தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் இது மண் ஸ்தலமாகும் (நிலம்) சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தருவது இத்திருத்தலத்தின் சிறப்பாகும். இத்திருக்கோவிலின் நாகசுனை தெப்பத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபட்டு புற்று மண் எடுத்து பூசிவர தீராத நோய் எல்லாம் தீரும் என்பது உண்மை. அம்பாள் சன்னதியில் உள்ள சக்ர பீடத்திலிருந்து அம்பாளை நினைத்து வழிபட நினைத்த காரியம் வெற்றி அடையும் என்பது தனிச் சிறப்பாகும்.
இத்திருக்கோயிலில் சண்முகருக்கென தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சண்முகர் திருச்செந்தூர் முருகக்கடவுளை போல் அமைந்திருக்கும்.கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். ஆறு படை வீடுகளில் ஐந்து படை வீடுகளில் சுப்ரமணியர் புறப்பாடு நடைபெறும். ஆனால் இத்திருக்கோயிலில் சூரசம்ஹாரத்திற்கு சண்முகர் (மட்டும்) புறப்பாடு நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும். இத்திருக்கோயிலில் ஆண்டுக்கு 4முறை (விசாகம், தைபூசம், சூரசம்ஹாரம், வருஷாபிஷேகம்) சண்முகர் வீதிவுலா நடைபெறும்.
இத்திருக்கோயிலில் நடராஜருக்கென தனி சன்னதி உள்ளது. இத்திருக்கோயிலில் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை சபாபதி அபிஷேகம் என அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிவபெருமானை விட்டுப் பிரியாத அருட்சக்தியாம் உமையம்மை, உலகத்தின் உயிர்களாகிய நாம், சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை உணர்த்தும் பொருட்டு திருக்கயிலை மலையில் பரமசிவனிடம் சிவபெருமானே தாங்கள் நாராயண மூர்த்தியுடன் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தைக் காட்டியருள வேண்டும். என்று வேண்டினார். அதற்கு இணங்கி சிவபெருமான் அம்மையை நோக்கி பூலோகத்தில் பொதிகை மலைச் சாரலிலுள்ள புன்னைவனத்தலமாகிய சங்கரநயினார் கோவில் என்னும் பதியில் தவம் செய்து நீ விரும்பிய திருமேனியைத் தரிசிக்கவும், என்று அருள்பாலித்தார். அதன் படி உமையம்மை தம்மைச் சூழ்ந்த பசுக்களாகி வந்த தேவமாதர்களுடன் கோமதியம்மை, ஆவுடையம்மை என்னும் காரணப்பெயர்கள் தாங்கி தவமிருந்தார். அம்மையின் தவத்திற்கிணங்க சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் அருள்தரும் கோமதியம்மனுக்கு அருள்மிகு சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தருளினார். சிவன் விஷ்ணு இருவரும் ஓர் உருவமாகச் சங்கரநாராயணராக மூலவர் சன்னதி உள்ளது.
அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சன்னதி பிரதான சன்னிதியாகும். இந்தச் சன்னிதியில் நான்கு மூலையில் முறையே கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர், வாயு மூலையில் பாம்பு புற்று, ஈசான மூலையில் விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சன்னிதியின் மேற்கு உட்பிரகாரத்தில் பஞ்சலிங்கம் உள்ளது. மும்மூர்த்திகளின் வடிவங்களாக தட்சிணாமூர்த்தி, யோக நரசிம்மர், பிரம்மா சன்னிதிகளும் உள்ளது. கால சர்பப தோஷ நிவர்த்தி, இராகுதோஷ நிவர்த்தி போன்ற பரிகாரங்களுக்குச் சர்ப்ப விநாயகர், பாம்புப் புற்று போன்றவற்றில் பால் அபிஷேகம் செய்யப்படுகின்றன. சூரிய சந்திர தீர்த்தங்கள் உள்ளன. இத்திருக்கோவில் மூலஸ்தானத்தில் மார்ச் 21, 22, 23 செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகள் சூரிய உதயத்தின் போது ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படர்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
பசுக்கள் புடைசூழ புன்னவனத்தில் தவமிருந்த கோமதியம்மாளுக்கு இறைவன் சங்கரநாராயணராக் காட்சியளித்தார். அம்மன் சன்னிதியில் உடலில் கட்டி மற்றும் நோய்களால் அவதிப்படுவோர் நெய்மாவிளக்கு ஏற்றியும், சன்னிதியில் உள்ள புற்றுமண் மருந்து எடுத்துப் பூசிக்கொள்ளவதால் வியாதி குணமடைகிறது. குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டியும், சரும வியாதிகள் நீங்க உப்பு, மிளகு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். தேள், பாம்பு, பூரான், விஷப்பூச்சிகள் தொல்லை நீங்குவதற்குத் தங்கம், வெள்ளி, உருவக் காணிக்கைகளைச் செலுத்தி பிரார்த்தனை செய்கிறார்கள்.
சைவமும் வைணவமும் ஒன்றான தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் இது பூமி ஸ்தலமாகும் (நிலம்) சிவனும் விஷ்ணுவும் சங்கரநாராயணராக ஒன்றாக காட்சியளிப்பது இத்திருத்தலத்தின் சிறப்பு. சுவாமி அம்பாளை வணங்கி, புத்திரபூஜை செய்து வர, தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.
இந்த ஓவியம் அருள்மிகு சங்கரநாராயண ஸ்வாமி சன்னதியின் உட் பிரகாரத்தில் அமைந்துள்ளது . இந்த படங்கள் அனைத்தும் மூலிகை இலைச்சாற்றினை கொண்டு வரையப்பெற்றுள்ளது.
சங்க கால இலக்கியத்தை பறைசாற்றும் வகையில் இச்சிற்பம் அமையப்பெற்றுள்ளது, இது ரதி சிற்பத்தின் எதிர் பக்கத்தில் அமையப்பெற்றுள்ளது.
சங்க கால இலக்கியத்தை பறைசாற்றும் வகையில் இச்சிற்பம் அமையப்பெற்றுள்ளது. இது மன்மதன் சிற்பத்தின் எதிர் பக்கத்தில் அமையப்பெற்றுள்ளது.
மணிக்கிரீவன் எனும் தேவன் காவற்பறையன் என்றும் அழைக்கப்படுகிறார் அவர் அன்னை பார்வதி தேவியின் சாபத்தால் பறையனாகி புன்னைவனத்தில் காவலாக இருந்தான். அதனால் அவன் காவல் பறையன் என பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதருக்கு புன்னை வனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் காவல் பறையனே காவல் இருந்து வந்தார். அந்தோட்டத்தின் அருகில் புற்று ஒன்று வளர்ந்திருந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்து பாம்பின் வால் வெட்டப்பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டு அந்நேரம் உக்கிரபாண்டியன் அடுத்தவனத்தில் வந்த சேதி குறித்து நடந்த செய்தியை தெரிவிக்க ஓடினான்.
இத்திருக்கோயிலில் தினமும் 150 நபர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 5250/- செலுத்தினால் செலுத்துபவர் பெயரில் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதான உபயதாரர் விபரம் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்படும். ரூ. 1,05,000/- செலுத்தினால் அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு 150 நபர்களுக்கு வருடந்தோறும் ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படும்.
அஞ்சல் பிரசாதம்
சாதாரண அறைகள் 18ம் குளிரூட்டப்பட்ட அறைகள் 2ம் அனைத்து வசதிகளுடன் பசலி 1432முதல் மூன்றாண்டு கால குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. .
வசதிகள் விவரம் - பக்தர்களின் வசதிக்கென முடிகாணிக்கை செலுத்தும் மண்டபம் தண்ணீர் வசதியுடன் உள்ளது. .
இக்கோயிலில் பக்தர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் 3 வீல் சேர்கள் உள்ளது. வயதான மற்றும் நோயுற்ற பக்தர்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. வீல்சேர்கள் பயன்படுத்தும் வகைக்கு இத்திருக்கோயில் பாரா தொடர்புகொள்ளலாம். தொடர்புகொள்ளும் . தொலைபேசி எண் 9791972174.
பொது மக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட திருமண மண்டபம் சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வரப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை 2014-2015 இல் திருக்கோவிலை ஆய்வு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க இந்த காலனி பாதுகாக்கும் இடம் அமைக்கப்பட்டு இன்று வரையில் நல்ல முறையில் செயல்படுத்தப் பட்டு வரப்படுகிறது .
திருக்கோயில் அருகில் பக்தர்களின் வசதிக்காக இலவச மருத்துவ சேவை மையம் திருக்கோயில் மூலம் 02.12.2022 அன்று துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் இலவசமான சேவை. தொடர்புக்கு : 04636222265
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் மண்டபம் அருகில் நடராஜர் சன்னதி அருகில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.





