
Century
14th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
மற்றவர்கள்
Praised By
பிற தமிழ் புலவர்கள்
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
புளியமரம்
இத்திருக்கோயிலுக்கு திருமண தடை நீங்குவதற்கு பிரார்த்தனையாக பால்குடம், காவடி எடுப்பதற்கு முறையாக எட்டு தினங்கள் விரதம் இருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் உடனடியாக திருமணம் நடைபெற்று வருகிறது.
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலானது விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள ஒரே பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், மற்றவர்களும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பிரார்த்தனை செய்து தாம் விரும்பியவற்றை நிறைவேற்றி கொள்கின்றனர்.
மலைமேல்குளம் ஒன்று அமைந்துள்ளது. இக்குளம் பாறையைக்குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத்திருக்குளம் பூஞ்சுனை என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்குளப்படிக் கட்டில் சப்தகன்னியர் சன்னதி அமைந்துள்ளது. திருவிழாவின் போது இப்பூஞ்சுனையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இச்சுனை நீர் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு இணையதள சேவை மூலம் கட்டணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். தினசரி அன்னதானம் 100-க்கும் அதிகமான மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்கப்படுகிறது. ஒரு நாள் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட ரூ.3500/- (ரூபாய் மூன்றாயிரத்து ஐநூறு மட்டும்) நன்கொடையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நிரந்தர வைப்புத் தொகையாக ரூ. 35000/- (ரூபாய் முப்பத்தைந்தாயிரம் மட்டும்) செலுத்தி வருடத்தில் ஒரு நாள் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிடலாம். அன்னதான நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80ஜி ) பெற இயலும்.
திருக்கோயில் சிற்றூந்தில் மலை மேல் செல்லவும், மலையிலிருந்து அடிவாரம் செல்லவும் நபர் 1க்கு ரூ.10/- கட்டணத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்க ரதம் உலா வரும் நிகழ்வு பயன்பாட்டில் உள்ளது. தினசரி கட்டணமாக ரூ.1200/- செலுத்தி பக்தர்கள் தங்க ரத உலாவில் பங்கேற்கலாம். நிரந்தர வைப்பு தொகையாக ரூ.20000/- செலுத்தி ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் தாம் விரும்பிய ஏதேனும் ஒரு நாளில் முன் பதிவு செய்து தங்க ரத உலாவில் பங்கேற்கலாம்.
இத்திருக்கோயிலில் சமய நூலகம் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பண்பொழி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள இந்துக்கள் தங்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணங்களை அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி சன்னதியில் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
போதுமான எண்ணிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென ஏற்படுத்தப்பட்ட குளியலறைகள் பயன்பாட்டில் உள்ளன.
பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பொருள்களை எடைக்கு எடை துலாபார காணிக்கையாக செலுத்தலாம். அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோவிலின் உட்பகுதியில் உள்ள சண்முக விலாசம் மண்டபத்தில் துலாபாரம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலின் அடிவாரப்பகுதியில் காலணிகள்பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலின் அடிவாரப்பகுதியில் பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகள் பயன்பாட்டில் உள்ளன. வாகனங்கள் நிறுத்துமிடங்களிலிருந்து சுவாமி சன்னதி வரை சக்கர நாற்காலிகளை கட்டணமின்றி பயன்படுத்த இயலும். மேலும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவதற்கேற்ற சாய்தள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போதுமான எண்ணிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென ஏற்படுத்தப்பட்ட நவீன கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளன.
வசதி அமைவிடம் மலைக்கோயிலில் அன்னதானம் உட்புறமும் வெளிப்புறமும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில் உட்புறமும் வெளிப்புறமும் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எல்லா நேரத்திலும் வழங்கப்படுகிறது.
பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் வசதி உள்ளது. பண்பொழி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் தமது முடியை திருமலைக்குமாரசுவாமிக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். முடிக்காணிக்கை செலுத்துவதன் மூலம் முருக கடவுள் தமது வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என நம்புகின்றனர்.
1. மலைக்கோயில் அருகே வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. 2.மலை அடிவாரப் பகுதியில் நுழைவு வாயில் அருகே போதுமான அளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் உள்ளது.





