அருள்மிகு ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam

Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
விருத்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னிமரம்
இத்திருக்கோயிலில் ஐந்து திருத்தேர்கள் உள்ளன 1. அருள்மிகு விநாயகர் திருத்தேர் 2.அருள்மிகு சுப்ரமணியர் திருத்தேர் 3.அருள்மிகு சுவாமி திருத்தேர் 4.அருள்மிகு அம்பாள் திருத்தேர் 5.அருள்மிகு சண்டிகேசுவரர் திருத்தேர்
திருக்கோயிலின் ஈசானிய மூலையில் இராஜகோபுரம் அருகில் அமைந்துள்ளது
திருக்கோயிலுக்கு ஈசானிய மூலையில் இராஜகோபுரம் அருகில் அமைந்துள்ளது
அகோர வீரபத்ரன்
அக்னி வீரபத்ரன்
. மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 100 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில். இதற்கான திட்டச் செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.35/- செலவிடப்பட்டது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக் கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 மணி முதல் 01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் ) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். நாள் ஒன்றுக்கு ரூ.3,500/- நிரந்த வைப்புத்தொகை ரூ.1,00,000/- .
திருக்கோயில் உள்ளே கொடிமரம் அருகில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இரண்டு சக்கர நாற்காலிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறும் வண்ணம் இலவசமாக காலணிகள் பாதுகாக்கப்படுகிறது
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறும் வண்ணம் திருக்கோயிலில் ஐந்து இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு பயன்பாட்டில் இருந்து வருகிறது





