அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், Vadakurankadu Durai, Thanjavur

Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
அருணகிரிநாதர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
தென்னை
கர்ப்பிணி செட்டிப்பெண்ணின் தாகத்தைத் தீர்த்த குலைவணங்கீஸ்வரரைப் பல பெண்கள் பிராத்தனை செய்து வணங்கி குழந்தைப்பேறும்,சுகப்பிரசவமும் அடைகின்றனர். அனைத்த பாகங்களும் பலன் தரும் தென்னையை ஸ்தல விருட்சமாகக் கொண்டு இத்தலத்தில் விவசாயிகள் நெல் நாற்றுக்களையும்,தென்னம்பிள்ளைகளையும் கொண்டு வந்து சன்னதியில் வைத்து வழிபட்டு அதிக மகசூல் பெறுகின்றனர். திருமணம் ஆகாதவர்கள்,இக்கோயிலில் எழுந்தருளியுள்ள அஹ்ட புஜ துர்க்கையை செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் அர்ச்சனை செய்து,எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபட்டு தோஷம் நீங்கி திருமணம் கைகூடப் பெறுகிறார்கள்.





