
Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
வைணவ அருளாளர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
பூவின் நறுமணம் அதிக தூரம் வீசும்.இப்பகுதியில் உள்ள காடுகளில் வனவாச காலத்தில் பாண்டவர்கள் சிறிது காலம் மறைந்து வாழ்ந்தனர். திரௌபதி அந்த நறுமணம் மிகுந்த அல்லிப் பூவினை விரும்பி பீமனிடம் பறித்து வர கேட்கிறார். பீமன் திருக்குளக்கரைக்கு வந்தபோது, ஒரு பெரிய குரங்கு தனது நீண்ட வாலை பரப்பி, குளத்திற்கு போகும் வழியை தடுத்து நிறுத்தி தவம் செய்தபடி இருந்தது.. பீமன் தன் அதிகார குரலில் வாலை எடுத்து வழி கொடுக்க கேட்டார். அது கண்டு கொள்ளவில்லை.அந்த குரங்கு வயதாக இருந்ததால், அதனால் தனது வாலை நகர்த்த முடியவில்லை என்று நினைத்த பீமன் வாலை தானே எடுத்து தள்ளி வைத்துவிட்டு வழி ஏற்படுத்தி கொள்கிறேன் என கேட்டான்.. சரி என்று சொல்லி மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தது. அந்த வயதான குரங்கு ஆஞ்சநேயர் ஆவார். வாலை தூக்கி வைப்பது மிக சுலபமான வேலை என்று நினைத்த பீமன் வாலை தூக்க தனது ஆற்றல் அனைத்தையும் பிரயோகம் செய்து வாலை நகர்த்த முயற்சித்தும் இம்மியளவும் அவரால் நகர்த்த முடியவில்லை. தன்னைவிட பலசாலி இந்த உலகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் மட்டுமே இருக்க முடியும் என நினைத்த பீமன் கையெடுத்து கும்பிட்டு சரணடைந்து அவருடைய ஆசீர்வாதங்களை வேண்டினார். பீமனுக்கு, ஸ்ரீ ஆஞ்சநேயரும் 1000 இதழ்கள் கொண்ட பூவை கொடுத்து அவரது விஸ்வரூபத்தைக் காட்டி உபதேசங்களும் செய்தார். தென்னகதுவாரகை என்றும் கோவிந்த விண்ணகரம் என்றும் கோபிநாத விண்ணகரம் என்றும் அழைக்கப்படும். ஸ்ரீ கோபிநாத திருக்கோயிலில் , ஸ்ரீசத்யபாமா ஸ்ரீருக்மணி சமேதராக ஸ்ரீகோபிநாத பெருமாள் அருள்பாலிக்கிறார். அவர்களுக்கு பின்னால் சுதை உருவத்தில் ஸ்ரீமன் நாராயனனும்,ஸ்ரீ ராமரும் மறுபக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணரும் சுதை வடிவில் அருள்பாலிக்கின்றனர் அழகிய தேரையும் தேர் ஓடும் வீதிகளை இக் கோவில் கொண்டு இருந்தது.
/
-
-
பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இணையதளத்தில் (018522 ) இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (தக்கார், அருள்மிகு கோபிநாத பெருமாள் திருக்கோயில், பட்டீச்சுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.





