
Century
16th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Agama Tradition
மகுட ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடன்
Sacred Tree (Sthalavriksha)
காளா செடி
ஒவ்வொரு பங்குனி மாதம் 2-ந் தேதியில் இருந்து 6-ந் தேதி வரை 5 நாட்களும் அதிகாலை சூரியனுடைய கதிர்கள், நடந்து வருவதை போன்ற தோற்றத்தில் வந்து சிவலிங்கத்தின் மீது விழுந்து பூஜை செய்து விட்டு வந்தவழியே திரும்பிப் போவதைப் போல தோன்றுவது அற்புதக் காட்சியாகும்.
ஸ்தல விருட்சத்தின் பெயர் காளா செடி, இத்திருக்கோயிலில் ஸ்தல விருட்சகம் சிறப்பாக கருதப்படுகிறது.
கலியுகத்தில் அபூர்வமான அனுராதா க்ரமண சரஸ்வதி சக்தித் தலம் ஹயக்ரீவப் பெருமாள் மூர்த்தியையே தம் சத்குருவாக அடைதற்கு சரஸ்வதி தேவி அருந்தவம் ஆற்றிய அற்புதத் தலங்களுள் ஒன்று உடையார் கோயில் ஆதலின் அனுராதா க்ரமண சரஸ்வதி அம்சங்களுடன் ருத்ராம்சத் தோற்றத்தில் தோன்றுகிறாள்.
இத்திருக்கோயிலின் முன்பு திருக்கோயிலை சுற்றி நான்கு புறமும் திருக்குளம் அமையப்பெற்றுள்ளது.
திருக்களாவுடையார் கோயில் திரிபுவன மாதேவிப்பேரேரி என்ற பரந்த நீர்ப்பரப்பின் நடுவில் அமைந்துள்ளது. திரிபுவன மாதேவிப் பேரேரி சிறப்பு பெயர் வேத தீர்த்தம் ஆகும். இப்பேரேரியானது நான்கு பக்கமும் நான்கு வேதங்களானது என்பது ஜதிகம். கிழக்கு புறம் உள்ள நீர்நிலை ரிக் வேத தீர்த்தம் இதில் பங்குனி மாதம் பவுர்ணமி நாளில் நீராடுவது சிறப்பு தெற்கில் யஜீர்வேத தீர்த்தம் இதில் வளர்பிறை அஷ்டமி திதியில் நீராடுவது சிறப்பு. மேற்கே சாம வேத தீர்த்தம் இதில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் நீராடுவது பலன் மிக்கது. வடக்கில் அதர்வண வேத தீர்த்தம் இதில் அனைத்து நாட்களிலும் நீராடுவது சிறப்பு மிக்கது.
இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு கரவந்தீஸ்வரர்.
இத்திருக்கோயிலின் அம்பாள் அருள்மிகு தர்மவல்லி தாயார்
இத்திருக்கோயிலில் சூரிய சக்தி தகடு மூலம் மின்சாரம் பெறப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
கோவிலின் இடது புறத்தில் கழிவறை வசதி உள்ளது,
குளியலறை வசதி





