Home/Temples/TN/Thanjavur/Arulmigu Kasiviswanathar Temple, Kumbakonam, Kumbakonam - 612001
Heritage Templehrce

Arulmigu Kasiviswanathar Temple, Kumbakonam, Kumbakonam - 612001

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், கும்பகோணம்

🕉️ ஸ்ரீ காசிவிஸ்வநாதஸ்வாமி Thanjavur, TN ஸ்ரீ விசாலாட்சி அம்பாள்
Arulmigu Kasiviswanathar Temple, Kumbakonam, Kumbakonam - 612001 — image 1
1 / 7
Also known as:ஸ்ரீ நவகன்னிகை ஸ்தலம்

History & Architecture

Century

7th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

தி௫ஞானசம்பந்தா்

Agama Tradition

காரண ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

இதர விமானம்

Sacred Tree (Sthalavriksha)

வில்வம்

Pooja Timings

உஷக்கால பூஜை06:00 AM to 06:30 AM IST
காலசந்தி பூஜை (புஷ்பம்)09:00 AM to 09:30 AM IST
உச்சிக்கால பூஜை (புஷ்பம்)12:00 PM to 12:30 PM IST
சாயரட்சை பூஜை (புஷ்பம்)05:30 PM to 06:00 PM IST
இரண்டாம்கால பூஜை (புஷ்பம்)07:00 PM to 07:30 PM IST
அர்த்தஜாம பூஜை (புஷ்பம்)08:00 PM to 08:30 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

அயோத்தி மன்னன் இராமன், இராவணனைக் கொல்ல உருத்திரம்சம் பெற அகத்திய மாமுனிவரை வேண்டிக் கொண்டான். கும்பகோணம் சென்று மகாமகக்குளத்தின் வடகரையில் வீற்றிருக்கும் காசிவிசுவநாதரை வழிபட்டால் அவரது விருப்பம் நிறைவேறும் என்று முனிவர் ராமருக்கு அறிவுரை கூறினார். அதுபோல ராமபிரான் இங்கும் முறைப்படி வழிபட்டு உருத்திர அம்சத்தை உடம்பில் படும்படி செய்தார். எனவே இத்தலம் காரோணம் என்று அழைக்கப்படுகிறது. கங்கை யமுனை நருமதை சரஸ்வதி காவேரி கோதாவரி துங்கபத்ரா கிருஷ்ணா சரயு என்ற ஒன்பது நதித்தலைவியரும் கயிலை சென்று உமாபதியை தரிசித்தனர். மகாமகத்திருக்குளத்தில் நீராடி பாபவிமோச்சனம் பெறும்படி அருளினார். நவகன்னியர் அத்தலம் இடம் அறியோம் எனக்கூற அவர்களை காசிக்கு செல்லும்படி அருளினார். பின்பு அவர்களுக்கு காசியில் தரிசனம் கொடுத்து தமது பரிவாரங்கள் சூழ குடந்தைக்கு அழைத்து வந்து முறையாக நீராடச் செய்தார்.

Temple Tank

மகாமகம் திருக்குளம்

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப்பெருவிழா இத்திருக்குளத்தில் நடைபெறுகிறது. மகாமகப்பெருவிழாவின் முதன்மை தீர்த்தமாக விளங்கும் இத்தீர்த்தம் நகரின் நடுநிலையில் அமைந்துள்ளது. அமுதகுடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என கும்பேசர் நினைத்தருள அவ்வண்ணமே அமுதம் திரண்டு நின்றது. அதில் ஒன்று மகாமக தீர்த்தக்குளமாகும். கங்கை யமுனை கோதாவரி நருமதை சரஸ்வதி காவிரி குமரி பயோடினி சரயு முதலிய நதிகளின் தேவதைகளான நவகன்னியர்கள் தத்தம் நதிகளில் பெருந்திரளான மக்கள் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதால் தங்களுக்கு ஏற்படும் பாவங்களை போக்கிக் கொள்ள பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாநாளில் குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் வரும் மாசிமகமாகிய பௌர்ணமி நாளில் நவகன்னியர்கள் இத்திருக்குளம் வந்து நீராடுகின்றனர். மகாமகத்திருக்குளத்தில் 21 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழாவின் போது மட்டுமே பக்தர்கள் 21 தீர்த்தக் கிணறுகளில் புனித நீராட முடியும். இந்த திருக்குளத்தில் மங்கள காலங்களில் புனித நீராட படிகள் உள்ளன. திருக்குளத்தைச் சுற்றி 16 சோடசமஹாலிங்கசுவாமி மண்டபங்கள் உள்ளன மற்றும் சிறிய கோயில்களில் சிவலிங்கங்கள் உள்ளது

Services

அன்னதானம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 15.09.2015 அன்று முதல் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு தினசரி நற்பகல்12.30 மணியளவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகிய உணவு வகைகள்வாழை இலையில் பரிமாறப்பட்டு வருகிறது. மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

Facilities

குளியல் அறை வசதி

கழிவறை மற்றும் குளியலறை உள்ளது

சக்கர நாற்காலி

சக்கர நாற்காலி வசதி உள்ளது

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

More Temples Nearby

View all →