Home/Temples/TN/Thanjavur/Arulmigu Kodeeswaraswamy Temple, Kottaiyur, Kumbakonam - 612001
Heritage Templehrce

Arulmigu Kodeeswaraswamy Temple, Kottaiyur, Kumbakonam - 612001

அருள்மிகு கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், கொட்டையூர், கும்பகோணம்

🕉️ அருள்மிகு கோடீஸ்வரர் Thanjavur, TN அருள்மிகு பந்தநாடு நாயகி
Arulmigu Kodeeswaraswamy Temple, Kottaiyur, Kumbakonam - 612001 — image 1
1 / 6
Also known as:-

History & Architecture

Century

12th - 13th நூற்றாண்டு

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

அப்பர் (திருநாவுக்கரசு)

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

ஆனந்த விமானம்

Sacred Tree (Sthalavriksha)

ஆமணக்குச் செடி

Pooja Timings

காலசந்தி பூஜை (-)09:00 AM to 10:00 AM IST
உச்சிக்கால பூஜை (-)11:30 AM to 12:00 PM IST
சாயரட்சை பூஜை (-)05:00 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை (-)07:30 PM to 08:00 PM IST

Sub Shrines

அருள்மிகு சுப்ரமணியர் சன்னதி

இத்திருக்கோயிலின் சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார். கோடிவிநாயகர் சன்னதியை அடுத்து கருவறைக்குப் பின்புறத்தில் அமைந்துள்ளது. முருகன் ஒருமுகமும் நான்கு திருக்கரங்களும் உடையவராய், வள்ளி தெய்வானையோடு தேவ மயில் அருகிருக்க நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

அருள்மிகு கோடிவிநாயகர் சன்னதி

இத்திருக்கோயிலின் விநாயகர் மூலவரை போன்று பலாப்பழத்தில் காணப்படும் முட்களை போல் முடிவில்லாத பல சிறிய விநாயக உருவங்கள் உள்ளன. இத்திருக்கோயிலின் விநாயகரை வழிப்பட்டால் கோடி விநாயகரை வழிப்பட்ட பயனைப்பெறலாம்.

அருள்மிகு ஹேரண்ட முனிவர் ஆத்ரேய மகரிஷி

ஹெரண்டா முனிவர், பத்ரயோகி மார்க்கண்டேயர் மற்றும் பலர் இத்தாலம் இறைவனை வணங்கி மோட்சம் பெற்றுள்ளனர். ஹெரண்டா காட்டில் தவம் செய்ததால் அவர் ஹெரண்டர் என்றும் அழைக்கப்படுகிறார். ஹெரண்டா முனிவார் ஆமணக்கு மரத்தின் கீழ் தவம் வழிபாடு செய்தார். அவர் ஆத்ரேய முனிவரின் மகன். காவரியை மீட்பதற்காக அவர் செய்த தியாகம் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாசிவராத்தியன்று சிவபெருமானை ஆதிஷேசன் வழிப்படுவதற்காக பாதாள உலகத்திலிருந்து ஒரு வழியினை ஏற்படுத்திக் கொண்டு முதற்காலத்தில் கும்பகோணம், நாகேஸ்வரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருபாம்புரத்திலும், நான்காம் காலத்தில் திருநாகையோரணம் ஆகிய ஸ்தலங்களில் சிவனை வழிப்பாடு செய்தலைத் வைத்திருந்தார். அரித்துவசன் என்னும் சோழ மன்னன் அகஸ்தியரை வேண்டி காவிரியை அழைத்து வந்தார். அங்ஙனம் வந்த காவிரி பிலத்தில் வலமாக சுழித்து புகுந்துவிட்டது. அவ்விடம் தான் திருவலஞ்சுழியாகும். அதை கண்ட மன்னன் மிகுந்த கவலையுற்றான். அச்சமயம் கொட்டையூரில் தவம் செய்து கொண்டிருந்த ஆத்ரேய முனிவரைப் பலமுறை வணங்கி நிலைமையை மன்னன் எடுத்து கூறினார். தன்னுடைய தவவலிமையின் காரணமாக யோசித்து மன்னனோ அல்லது மாதசவியோ அப்பிலத்தில் இறங்கினால் காவிரி மேலே வரும் என்று அறிந்தார். அதை கேட்ட அந்த சோழமன்னன் மனம் மகிழ்ந்து தானே பிலத்தில் இறங்கச் சென்றவரைத் தடுத்து தானே அதில் இறங்கிவிட்டார். பிலத்தில் புகுந்த காவிரி அடிவழியாக பாதாளம் சென்றது அடைபட்ட காவிரி மேலே வந்து நிலத்தில் பாய ஆரம்பித்துவிட்டது. பாதாளம் சென்ற காவிரி பெரும் பள்ளத்தினை உண்டாக்கியது. அதன் வழியே ஹேரண்டகர் வெளிப்பட்டு அங்குள்ள திருவலம்புரம் மேலபெரும்பள்ளம் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு ஜீவசமாதி அடைந்தார். அவருடன் மன்னனும் காவிரிவெள்ளத்தில் சென்று திருவலம்புரத்தில் கரையேறி முனிவரையும் இறைவனையும் வழிபட்டதாக திருவலம்புரம் புராணம் கூறுகிறது. ஹேரண்ட முனிவரின் சிலை கொட்டையூரில் தவம் செய்யும் உருவமாகவும், திருவலஞ்சுழியில் காவிரி அன்னையை வணங்கும் நின்ற உருவமாகவும், திருவலம்புரத்தில் ஜீவசமாதி நிலையில் உள்ளார். கொட்டையூரில் நடைபெறும் திருவிழாவில் பஞ்சமூர்த்தி உலாவின்போது ஹேரண்டக முனிவரும் தனி படிச்சட்டத்தில் உலாவருவார்.

அருள்மிகு சண்டிகேஸ்வரர் சன்னதி

-

அருள்மிகு பந்தநாடு நாயகி அம்மன் சன்னதி

இத்திருக்கோயிலின் இறைவி கோடியம்மையார், பந்தாடு நாயகி எனும் பெயரில் அழைக்கப்படுகிறார். இத்தலத்து அம்மன் ஒருமுறை பத்திரயோகிக்கு பந்தாடும் பாவையாக காட்சி அளித்ததால் பந்தாடு நாயகி எனும் பெயரை பெற்றார். பந்தாடு நாயகி என்பது வடமொழியில் கந்துக்கிரீடாம்பிகை எனப்படும். அப்பர் சுவாமிகள் பந்தாடு மெல் விரலாள் என்றும் போற்றியுள்ளார். கோடீச்சுரக் கோவை பந்தாடுமை பந்தேற்ற கைஉமை என்று இத்தலத்து அம்மனை சிறப்பிக்கின்றது. அம்பாள் மேற்கரங்களில் அட்ச மாலையும், தாமரை மலரும் தாங்கியுள்ளார். கீழ்கரங்கள் அபய, வரத முத்திரைகள் காட்டுகின்றன. தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு கஜலெக்ஷ்மி சன்னதி

-

அருள்மிகு கோடீஸ்வரசுவாமி சன்னதி

இத்திருக்கோயிலின் மூலவர் கோடீஸ்வரர் எனும் திருப்பெயருடன் காணப்படுகிறார். பத்ரயோகி முனிவருக்குக் கோடி லிங்கங்களாக காட்சியளித்ததால் சுவாமி கோடீஸ்வரர் எனப்பட்டார். இச்சிவலிங்கத்தில் பலாப்பழத்தில் காணப்படும் முட்களை போன்று முடிவில்லாத பல சிறிய சிவலிங்கங்கள் உள்ளன. ஆதலின் இவரை வழிப்பட்டால் கோடி லிங்கங்களை வழிப்பட்ட பயனைப்பெறலாம்.

அருள்மிகு நவக்கிரக சன்னதி

இத்திருக்கோயிலில் உள்ள நவக்கிரக மூர்த்திகள் அவர்களது வாகனங்களுடன் காணப்படுவது தமிழ்நாட்டில் எந்த தலத்திலும் இல்லாத அற்புத சிறப்பம்சமாகும்.

அருள்மிகு அஷ்டபுஜ துர்க்கை

-

More Temples Nearby

View all →