Home/Temples/TN/Thanjavur/Arulmigu Mullaivananatha Swamy Temple, Thirukkarugavur - 614302
Heritage Templehrce

Arulmigu Mullaivananatha Swamy Temple, Thirukkarugavur - 614302

அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர்

🕉️ முல்லைவனநாதர் Thanjavur, TN கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்
Arulmigu Mullaivananatha Swamy Temple, Thirukkarugavur - 614302 — image 1
1 / 4
Also known as:கர்ப்பரட்சாம்பிகை கோயில்

History & Architecture

Century

7th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

சைவ நால்வர்

Poet Saint

மாணிக்கவாசகர்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

அஷ்டாங்க வைமானம்

Sacred Tree (Sthalavriksha)

முல்லைக்கொடி

Pooja Timings

உஷக்கால பூஜை (பூ அலங்காரம்)05:30 AM to 06:00 AM IST
காலசந்தி பூஜை (பூ அலங்காரம்)08:30 AM to 09:00 AM IST
உச்சிக்கால பூஜை (பூ அலங்காரம்)12:30 PM IST
சாயரட்சை பூஜை (பூ அலங்காரம்)05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை (பூ அலங்காரம்)08:00 PM to 08:30 PM IST

Temple Speciality

பரிகாரம்

கருணை மழை பொழியும் கற்பகம் கருகாவூரில் வாழும் அற்புதல் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய நாயன்மார்களுள் திருஞான சம்பந்தர் (ம) மாணிக்கவாசகர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க பிரார்த்தனை ஸ்தலமாகும். இத் திருக்கோயிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு வடிவமாக உள்ளனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவ தில்லை. வளர்பிறை பிரதோஷம் அன்று புனுகு சட்டம் மட்டுமே சாத்தி வழிபடுவதே சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைபேறு உண்டாகும், கருச்சிதைவு ஏற்படாது, புத்திர பாக்கியம் தொடர்பான தோஷங்கள் ஏற்படாது. அம்பாள் பெயர் கருகாத்த நாயகி வடமொழியில் கர்ப்பரக்ஷ்சாம்பிகை. இத்திருக்கோயில் அம்பாள் சந்நியில் நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும். கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்த விளக்கெண்ணை வலி ஏற்படும் போது வயிற்றில் தடவினால் எந்தவிதமான கோளாறு இல்லாமல் சுகப்பிரசவம் ஏற்படும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். மற்றும் இத்திருத்தலம் பற்றி பெரிய புராணம், உமாபதி சிவம் பாடியுள்ள சிவஷேத்திர சிவநாமக கலிவெண்பாவிலும், ராமலிங்க அடிகளார் விண்ணப்பக்கலி வெண்பாவிலும் இடம் பெற்றுள்ளது.

பிரசாதம்

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக இத்திருக்கோயிலில் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருப்பாதத்தில் வைத்து விளக்கெண்ணை மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இந்த பிரசாத எண்ணையை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எந்தவிதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ, பின்விளைவுகளோ இல்லாம் சுகப்பிரசம் ஏற்படும்.

பிரசாதம்

குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைபேறு உண்டாகும், கருச்சிதைவு ஏற்படாது, புத்திர பாக்கியம் தொடர்பான தோஷங்கள் ஏற்படாது. அம்பாள் பெயர் கருகாத்த நாயகி வடமொழியில் கர்ப்பரக்ஷ்சாம்பிகை. இத்திருக்கோயில் அம்பாள் சந்நியில் நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

பிரார்த்தனை

வற்றாத நீரும், வளம் கொழிக்கும் காவிரியும், முற்றாத வாழை முகம் பார்க்கும் கொள்ளிடமும், வெண்ணாற்றிடை உயர்ந்த வீரத்தமிழ்ச் சுவையும் கண்ணாறக் காண்கின்ற கன்னித்தமிழகமாய் சோழப்பெருநாட்டில் காவிரித்தென்கரை தலங்களில் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலமாக விளங்கி வருவது கருகாத்தநாயகி உடனுறை முல்லைவனநாதசுவாமி திருக்கோயிலாகும். ,இத்திருக்கோயில் சுவாமி, விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும் சுவாமி கோயில் பின்புறம் லிங்கோத்பவர் இருக்கும் குடவரையில் அர்த்தநாரீஸ்வர்ர் அமைந்து இருப்பதுவும் சிறப்பாகும். இத்தலத்தின் தலவிருட்சம் முல்லைக்கொடி. எனவே இத்தலத்து இறைவன் பெயர் முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். நேருக்கு நேராக அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய பஞ்சாரண்யத் தலங்களில் முதலிடம் பெற்ற தலம் திருக்கருகாவூர். இந்த தலத்தில் உசக்காலம் தரிசனம் செய்துவிட்டு ஏனைய நான்கு தலங்களை காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் முறையே அவளிவநல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புத்தூர் தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது. உஷக்காலத்தில் இத்தலத்தை தரிசனம் செய்துவிட்டு ஏனைய காலங்களில் மற்ற தலங்களை தரிசிப்பதற்கு ஏதுவாக இத்திருக்கோயிலில் காலை 5.30 மணிக்கு உஷக்காலம் செய்விக்கப்படுகிறது.

பிரார்த்தனை

இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முல்லைவனநாதர் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமிக்கு அபிசேகம் செய்வது இல்லை. சுவாமியின் திருமேனியில் புனுகுசட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. தீராத நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு வளர்பிறை பிரதோசத்தில் புனுகு சாத்தி நோய் நீங்கப்பெறலாம்.

Sub Shrines

முல்லைவனநாதர்

முல்லைவனநாதர்

கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்

கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்

கற்பகவிநாயகர் உபசந்நிதி

சுயம்பு திருமேனி

சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை உபசந்நிதி

சுவாமி, அம்மன், நடுவில் சுப்பிரமணியர் சன்னதி அமைந்து சோமாஸ்கந்த அமைப்பில் இருப்பதால் இங்கு தரிசிப்பவர்களுக்கு புத்திரபேற்றையும், மற்றும் கருவை சிதைவின்றியும் காத்தருள்கின்ற அருள்பேற்றையும் வழங்கும் தலமாக விளங்குகின்றது.

Temple Tank

ஷீரகுண்டம்

ஷீரகுண்டம் (பாற்குளம்)- கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ள இத்திருக்குளம் தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்க பெற்றது, சிவராத்திரி காலத்தில் பெருமான் இங்குதான் தீர்த்தம் அருளுகிறார். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி முடிவில் விஜயதசமி அன்று இத்திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடத்தப்படும்.

பிரம்ம தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம் - இத்திருக்குளம் திருக்கருகாவூருக்கு தென்மேற்கில் கற்சாலைக்குக் கீழ்ப்பக்கம் இருக்கின்றது. மார்கழித்திருவாதிரையில் நடராசப்பெருமான் சிவகாமி அம்மையாருடன் இங்கு வந்து தீர்த்தம் அருளுகின்றனர்.

Services

அன்னதானம்

இத்திருக்கோயிலில் திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை 100 நபர்களுக்கும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.

Temple Services

எங்கள் ஆலயத்தில் அர்ச்சனை பொருட்கள் விற்பனை 01.11.2022 முதல் தொடங்கப்பட்டது

Facilities

தங்குமிட வசதி

1.ஏ.சி அறை- 2 நபர்கள் தங்குவதற்கு நாள் 1-க்கு அறை வாடகை (12 மணி நேரம் மட்டும்)-ரூ.850/-(கூடுதல் நபர் ஒருவருவருக்கு நாள் 1-க்கு (12 மணி நேரம் மட்டும்)-ரூ.200/- 2. ஏசி இல்லாத அறை- 2 நபர்கள் தங்குவதற்கு நாள் 1-க்கு அறை வாடகை (12 மணி நேரம் மட்டும்)-ரூ.700/-(கூடுதல் நபர் ஒருவருவருக்கு நாள் 1-க்கு (12 மணி நேரம் மட்டும்)-ரூ.100/-

கோல்டன் பிரார்த்தனா தொட்டில்

.

பாலூட்டும் தாய்மார்கள் அறை

2வது கோபுரத்துக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை வசதி உள்ளது

காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம்

ராஜகோபுரத்தின் முன்புறம் செப்பல் வைக்கும் வசதி உள்ளது.

வாகன நிறுத்தம்

கோயிலின் முன்புறம் ராஜகோபுரத்துக்கும் திருக்குளத்திற்கும் இடையே உள்ள இடத்தில் மேற்கூறையுடன் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.

நூலக வசதி

ராஜகோபுரத்திற்கும் 2வது கோபுரத்திற்கும் இடையில் சமய நூலக வசதி உள்ளது

கழிவறை வசதி

பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் இரண்டு கழிவறைகள் தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

தாய்மார்கள் பாலூட்டு அறைக்கு அருகில் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைந்துள்ளது.

சக்கர நாற்காலி

முதியோர்கள் (ம) மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய மின் சக்கர நாற்காலி வசதி உள்ளது

சக்கர நாற்காலி

முதியோர்கள் (ம) மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சக்கர நாற்காலி வசதி உள்ளது

More Temples Nearby

View all →