Home/Temples/TN/Thanjavur/Arulmigu Nadiyamman Temple, Pattukkottai - 614602
hrce

Arulmigu Nadiyamman Temple, Pattukkottai - 614602

அருள்மிகு நாடியம்மமன் திருக்கோயில், Pattukkottai

Thanjavur, TN அருள்மிகு நாடியம்மன்
Arulmigu Nadiyamman Temple, Pattukkottai - 614602 — image 1
1 / 6
Also known as:நாடியாயீ

History & Architecture

Century

19th நூற்றாண்டு

Pooja Timings

உச்சிக்கால பூஜை (சித்திரை தமிழ் வருட பிறப்பு, ஆடி மாதம் வெள்ளி மற்றும் செவ்வாய் விஷேச அலங்கார ஆராதனை நடைபெறும், ஆவணி விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி தீபாவளி திருநாள், கார்த்திகை தீப திருநாள், மார்களி தனூர் பூஜை, தை மாதம் மகர சங்கராந்தி, தை மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளி விஷேச அலங்கார ஆராதனை நடைபெறும், பங்குனி உற்சவ பெருந்திருவிழா)07:30 AM to 12:30 PM IST
காலசந்தி பூஜை07:30 AM to 08:30 AM IST
மாலை பூஜை (அம்பாளுக்கு பக்கதர்களின் ப்ரார்தனைகளுக்க்காக அர்ச்சனைகள் , தை மாதம் ஆடி மாதம் கார்த்திகை மார்கழி மாதம் வெள்ளி செவ்வாய் விசேஷ அலங்காரம் ஆராதனை தினந்தோறும் நடைபெறும்)04:30 PM to 08:30 PM IST

Temple Speciality

பிரார்த்தனை

புராணம் பட்டுக்கோட்டை நாயக்க மன்னரான பட்டு மவழவராயர் காட்டில் வேட்யைhடச் சென்றார். அப்போது ஓர் இளம் பெண் நாடியம்பாள்புரம் என்றழைக்கப்படும் இடத்தில் நின்று கொண்டு இருந்தாள். தனியாக காட்டில் ஊர் இளம் பெண் நிற்க்க காரணம் என்ன என்று பட்டு மழவராயர் அவளை கேட்கச் சென்றார் அவளோ மன்னனைக் கண்டவுடன் திரும்பி பாராது வேகமாக நடந்து சென்றாள் சந்தேகங்கொண்ட மன்னன் அவளைத் தொடர்ந்து விரைந்து சென்றார். இன்று கோயில் இருக்கும் இடம் வந்தவுடன் அப்பெண் மாயமாக மறைந்து விட்டாள். தொடர்ந்து வந்த பட்டு மழவராயர் அவளைக் காணாமல் சிந்தனை வயப்பட்டு இருப்பிடம் வந்து அவர் ஊண் உறக்கமின்றி தவித்தார். அப்போது அப்பெண் அவர் முன் தோன்றி தான் எல்லைகாவல் தெய்வம் என்றும், தனக்கு ஒரு கோயில் கட்டித் தரும்படி அவரைக் கேட்டாள் மன்னனும் கோயில் எழுப்பி அவளை வணங்கலானார். இக்கதை சிலையை கண்ட முதற் கதையிலிருந்து நாடியம்மனை மானிடப் பெண்ணைக் கண்டதாக சொல்லுகிறது பிரார்த்தனை குழந்தை பேருக்காக, திருமண தடை நீங்க, கல்வி வேலைவாய்ப்பு கிடைக்க, பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது

Sub Shrines

வீரனார்

உப சன்னதி திருக்கோயில் சுற்று பிரகாரத்தில் அமைத்துள்ளது இது ஒரு ப்ரஎர் தலமாகும்

Services

அன்னதானம்

தினம்தோறும் நண்பகல் 12.30கு அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை முடிந்தவுடன் அன்னதானம் 50 பக்தர்கள் மற்றும் சேவர்த்திகளுக்கு அன்னதானம் திட்டமானது சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது

Facilities

துலாபாரம் வசதி

துலாபாரம் வசதி உள்ளது கோவில் ராஜகோபுரம் முன் மண்டபம் நுழைவாயில்

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயில் மணிமண்டபம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைப்பு நிருவப்பட்டு நான்கு குடிநீர் குழாய்கள் உள்ளது

துலாபாரம் வசதி

அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் அர்த்தமண்டபம் அருகாமையில் துலாபாரம் எடைக்கு எடை பிரார்த்தனையானது திருக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது

குளியல் அறை வசதி

திருக்கோயில் மேற்கு புறம் 2 மற்றும் கிழக்கு புறம் 4

More Temples Nearby

View all →