
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
வட்டம் வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
பாதிரி
வடமொழியில் ஔஷதம் என்பதற்கு தமிழில் மருந்து எனப்பொருள். உயிர்களில் நோய்களைத் தீர்க்கின்ற அருளாளன் ஆகிய இறைவனுக்கு மருந்தீஸ்வரர் எனப்பொருள். ஔஷதபுரீஸ்வரர் என்ற இறைவனின் திருப்பெயராலே மருந்துப்பள்ளம் என அழைக்கப்படுகிறது. அதன் காரணமாக ஔஷதபுரீ என வடமொழியில் இக்கிராமத்திற்கும் ஔஷதப்ரீஸ்வரர், மருந்தீஸ்வரர் என சுவாமிக்கு பெயர்கள் விளங்கியதாக வரலாறு. ஔஷதப்ரீஸ்வரர் தமிழாக்கமே மருந்துப்பள்ளம்.மன்னர் அவர்கள் தேசாந்திரம் வந்த போது மனோரா கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு தங்கி இருந்த அந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்து வந்த நோய் பற்றி சொல்லியிருக்கலாம், அதன் பேரில் மருங்கப்பள்ளம் திருக்கோயில் வளாகப்பகுதிகளில் இருந்து வந்த பச்சிலை மூலிகைகள் பற்றியும் அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பற்றியும் மன்னர் கேட்டறிந்து மருங்கப்பள்ளம் கிராமத்திற்கு வந்து திருக்குளத்தில் நீராடி, நோய்தீர பச்சிலை மூலிகைகள் உண்டு ஔஷதபுரீஸ்வரரை வழிபட்டதன் பயனாக மன்னருக்கு இருந்து வந்த நோய் தீர்ந்ததாக வரலாறு. காண்டத்தில் குறிப்பிட்டுள்ள முனிவர் சித்த வைத்தியர் ஒருவரும் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு திருக்குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள அவரது கற்சிலை விக்கிரகம் இன்றும் சான்று கூறுகிறது.
இத்திருக்கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் சுமார் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் வெண்தாமரைசெந்தாமரையுடன் கூடிய திருக்குளம் அமைந்துள்ளது. மூன்று படித்துறைகள் உள்ளன. இத்திருக்குளத்தில் நீராடி, எழுந்தருளியுள்ள சுவாமியையும்-அம்மையையும்-சனிபகவானையும் ஏனையமூர்த்திகளையும் வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்
திருக்கோயில்
திருகோயில் முன்பாக திருக்குளம் உள்ளது





