அருள்மிகு புஷ்பவனேசுவரர் திருக்கோயில், மேலத்திருப்பந்துருத்தி, மேலத்திருப்பந்துருத்தி

Century
6th - 7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
தேவார மூவர்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
பிதுா்சாபநிவா்த்தி ஸ்தலம்.
காசிப முனிவர், இராமலிங்க சுவாமிகள் வழிபட்ட தலம். யோக நிலையில் ஒன்ற முடியாது தவித்த காசிப முனிவர் இத்திருத்தலத்தில் கங்கை முதலான 13 புண்ய நதிகளை இணைத்து கங்கையை தனது தவ வலிமையால் ஆடி அமாவாசை தினத்தன்று பொங்கி எழச் செய்தார்.காசிப முனிவர் இந்த கங்கை தீர்த்தத்தில் நீராடி யோக நெறி கைகூடப் பெற்றார்.
புஷ்பவனேசுவரா்
கருவரை முன் மண்டபம் மற்றும் மகா மண்டபம்
அருள்மிகு காசி விசுவநாதர் சன்னிதி நுழைவு வாயிலின் தென்மேற்கு திசையில் மேற்கு நோக்கி உள்ளது.
துர்க்கையின் சன்னிதி இரண்டாவது வாயிலைக் கடந்ததும் வலது புறத்தில் வடக்கு நோக்கி தனி சன்னிதியாக அமைந்துள்ளது.
மகாலட்சுமி சன்னிதி பிரகாரத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.
வள்ளி தேவசேனா சமேத முருகன் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
சண்டிகேஸ்வரர் சுவாமி சன்னிதியின் கோஷ்டத்தின் வடதிசையில் தென்முகமாக அருள்பாலிக்கின்றார்.
சுவாமி சன்னிதியின் கோஷ்டத்தில் வடதிசையில் வீணா தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
முதல் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்கே தென்கைலாயம் அமைந்துள்ளது,
திருக்கோயிலில் உள்ள ஆதிவிநாயகா் சன்னிதி தென்மேற்கு திசையில் மேற்கு நோக்கிஅமைந்துள்ளது.
உமையொருபாகன் என்றழைக்கப்படும் அம்மையப்பனான இறைவன் ரிஷபத்தின் மீது ஓா் கையை ஊன்றி ஒய்யாரமாக நின்ற நிலை இது சோழா்களின் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சங்கரநாராயணர் சிற்பம் திருக்கோயிலில் சுவாமி சன்னிதி கோஷ்டத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது





