
Century
10th - 11th நூற்றாண்டு
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
பாதிரி
வன்மீக நாதராம் புற்றிடங்கொண்ட பெருமானைப்பற்றிய புராண வரலாறு உண்டு. திருமால் தனது தவவலிமையால் தேவர்கள் அனைவரையும் தோற்கச் செய்து யாக குண்டத்திலிருந்து சிவதனுசு எனும் வில்லைப் பெற்றமையால் ஏற்பட்ட செருக்கால் தேவர்களை தாக்க துரத்திக்கொண்டு வந்தபோது, இறுதியில் திருவாருர் தலம் வந்தடைந்து சோர்வு அடைந்தாராம். அப்போது நாணேற்றிய வில்லைத் தரையில் ஊன்றிய வண்ணமே உறங்கிநாராம். அவ்வாறு உறங்கிய போது தேவர்கள் அனைவரும் எறும்பு உறு எடுத்து மாலவன் அறியாமலேயே வில்லின் நாணை துண்டித்தனர் என்றும் நாண் அறுந்து வில் நிமிர அவ்விசையால் திருமால் தலையகன்றதாகவும், அப்போது செய்வதறியாது அஞ்சிய தேவர்கள் கயிலைநாதனை பணிந்தனர் என்றும், உடன் ஈசனும் புற்றிடங்கொண்டார் என்ற திருநாமத்தோடு பாதாளத்திலிருந்து எழுந்தருளித் திருமாலை உயிர்ப்பித்ததோடன்றி தேவர்கள் தோற்றுவித்த புற்றையே லிங்க உருவமாகக் கொண்டு புற்றிடங்கொண்டான் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்தார் என்றும் திருவாருர் தலமகாமித்யம் கூறுகிறது.
இச்சன்னதி ஐந்து முகங்களைக் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி ஆகும், இதற்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பெயர்,
இத்திருக்கோயிலின் சிற்பங்கள் யாவும் கருங்கல்லால் ஆனது.
இத்திருக்கோயிலின் வெளிப்புறத்தில் கழிப்பிட மற்றும் குளியலறை வசதி உள்ளது.





