
Century
தெரியவில்லை
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பலாமரம்
இத்திருக்கோயிலின் விசேஷ மூர்த்தியாக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். கருவறையின் தெற்கு நோக்கிய கோஷ்டத்தில் தென்முகக் கடவுளான ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி 12 ராசிகளையும் மேஷம் முதல் மீனம் முடிய பீடமாக அமைத்து அமர்ந்த திருக்கோலத்தில் குருவினால் ஏற்படும் குறைகளைக் களைந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய கோலத்தில் தட்சிணாமூர்த்தி காட்சித் தருவது இத்தலத்தில் மட்டுமே என்பது சிறப்பான செய்தியாகும்.ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் குருவிற்கு நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
இத்திருக்கோயிலின் தீர்த்தம் சோம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன், குபேரன் ஆகியோர் தலத்தீர்த்தத்தில் நீராடி இறைவன் அருள் பெற்றுள்ளனர். இத்தலத் தீர்த்தம் சகல பாவங்களையும் போக்கும் அருட்தன்மையுடையதாக பக்தர்களால் கருதப்படுகின்றது. பல பிறவிகளில் செய்த பாவங்களால் செல்வத்தினை இழந்து வருந்தும் பக்தர்கள் ஒரு நன்னாளில் இந்த சோமதீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பாவங்கள் நீங்கி, இழந்த செல்வங்களை மீண்டும் பெற்று பெருமையும், வேலைவாய்ப்பு, தடைபட்ட திருமணங்கள், குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை ஆகியவற்றினை பெறலாம்.
இத்திருக்கோயிலின் வெளிப்புறம் அய்யனார் குளத்திற்கு பின்பக்கம் செட்டி குளம் அமைந்துள்ளது
இத்திருக்கோயிலுக்கு வெளிப்புறம் கிழக்கு பகுதியில் அய்யன் குளம் அமைந்துள்ளது
இத்திருக்கோயிலுக்கு வெளிப்புறம் எதிர்திசையில் அய்யனார் குளம் அமைந்துள்ளது
இத்திருக்கோயிலுக்கு வெளிப்புறம் கிழக்கு பகுதியில் அம்மன் குளம் அமைந்துள்ளது



