அருள்மிகு சித்தநாதர்சுவாமி திருக்கோயில், திருநறையூர், Kumbakonam

Century
5th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நால்வர்
Poet Saint
மாணிக்கவாசகர்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பவழம்
அன்னை மகாலட்சுமியின் அவதார ஸ்தலம் என்பதால் சிவபெருமான் சுயம்புமூர்த்தி ஆவார். அவள் மழலை மகாலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள் சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, தேவர்களின் சாபத்தால் தோல்வியாதி உண்டானது. நோய் நீங்க அவர் இங்கு சுவாமியை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து நோயை நீக்கி அருள்புரிந்தார். கோரக்க சித்தருக்கு அருள்புரிந்தவர் என்பதால் இவர், சித்தநாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். சுவாமி கோஷ்டத்தில், சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் இருக்கிறது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார். தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக நம்பிக்கை.
தாமரை குளம்





