
Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
சைவசித்தாந்தச் சாத்திர நூல்களுள் ஒன்றாகிய திருவுந்தியார் பாடிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அவதரித்த தலம். குரவங் கமழ் நறுமென்குழல் உரிவை அவள்வெருவப் பொருவெங்கரி படவென்றதன் அரிவை உடல் அளிவோன் அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவும் சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே. -திருஞானசம்பந்தர். என இறைவனை போற்றியுள்ளார். திருநாவுக்கரசர் க்ஷேத்திரக் கோவைத் திருததாண்டகத்தில், வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் . . . . . . . . கயிலாய நாதனையே காணலாமே. திழநாவுக்கரசர்-திருத்தாண்டகம். துலாபாரம் இராஜராஜ சோழன் பிறப்பதற்காக அவரது தந்தையார் தங்கத்தால் பசுமாடு செய்து அவரும், அவரது மனைவியும் பசுவின் பின்புறம் உள்சென்று அவ்வழியே வெளியே வந்து நேர்த்திக்கடன் செய்ததன் விளைவாக இராஜராஜ சோழன் பிறந்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. தானம் கொடுத்த தங்கப் பசுவை பிரித்து அதனை பலகோவில்களுக்கு கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. தற்காலத்தில் தங்கத்திற்கு ஈடாக நெல்லை தனமாக கொடுக்கும் பழக்கம் நடந்து வருகிறது. கடிகாரம் இத்தலத்தில் சௌந்தர நாயகி அம்பிகையின் சன்னதிக்கு நேர் எதிரே அம்பாளின் பார்வையில் ஒரு தாமரைத் தடாகமும், மதில் சுவற்றில் சோழர் காலத்து மணிகாட்டியும் காணப்படுகிறது ஒரு சிறப்பாகும். இது ஒரு சூரிய ஒளி மணிகாட்டியாகும். சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அம்மன் சன்னதி எதிரே உள்ளது. திருமதிலில் காணப்படுகிறது. அரைவட்ட வடிவில் மணி எழுதப்பட்டிருக்கிறது. நடுவில் உள்ள ஆணி ஒன்றின் நிழல் எந்த இடத்தில் விழுகிறதோ அங்கே நேரம் எழுதப்பட்டிருக்கிறது.
வில்வம், ஜடாயு வழிபட்ட ஸ்தலம், தீர்த்தம்- ஜடாயு தீர்த்தம்.





