அருள்மிகு சௌந்தரராஜபெருமாள் திருக்கோயில், சுந்தரபெருமாள்கோயில், சுந்தரபெருமாள்கோயில்

Century
13th நூற்றாண்டு
Agama Tradition
வைகாணசம்
Sacred Tree (Sthalavriksha)
பன்னீர் மரம்
கோபுர விநாயகர் இந்தினால் பிரதிட்டை செய்யப்பெற்ற மூர்த்திகளில் முன்கோபுர வாயிலில் உள்ள விநாயக மூர்த்தியும் சேர்ந்தவர். இவர் வடக்கு நோக்கியுள்ளார். இந்த மூர்த்தி பின்னப்பட்டிருந்ததால் சிலகாலம் பூஜையில்லாமல் இருந்தது. அப்போது விநாயகர் சோழ மன்னனுடைய கனவில் தோன்றிக் தனக்குப் பூஜை இல்லாதிருப்பதைத் தெரிவித்து முறையிடவே அரசனது ஆணைப்படி தினந்தேறும் பூஜைகள் நடந்து வருகின்றன. கோயிலுக்கு வருபவர் முதலில் இந்த கோபுர விநாயகரைத் தரிசித்தப்பிறகே உள்ளே சென்று வழிபடுவர்.
தீர்த்தங்கள் இக்கோயிலின் சந்நிதிக்கு எதிரில் உள்ள கடையன் குளமும், கோயிலின் வடபுறத்திலுள்ள தேவரடியாள் குட்டையும் தீர்த்தங்களாக உள்ளன. மற்றோர் தீர்த்தம் தூர்ந்துவிட்டது. மற்றும் இவ்வூரையடுத்தள்ள அரசலாறும் தீர்த்தங்களின் நீராடி மூர்த்திகளை வழிபடுவோர் வேண்டும் சித்திகளைப் பெறுவர்.
கெருடன்தலம்
கோயிலும், கோபுரமும், மண்டபங்களும், மூர்த்திகளும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. முன் கோபுரம் 5 கண்களையும் உள்கோபுரம் 3 கண்களையும் கொண்டு விளங்குகிறது. கோபுர வாயிலிலிருந்து உள்ளே படிப்படியாக உயர்ந்து எடுப்பாக அமைந்துள்ளது. மூலவர் மண்டபத்தைச் சுற்றிலும் அடித்தளத்தில் பெருமாள், கஜேந்திரன், கருட வாகன காட்சி முதலிய சிலைச் சிற்பங்கள் உள்ளன. கர்ப்பக்கிரகத்துச் சுவரில் முப்பத்துமுக்கோடி தேவர் நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகள் சூழப் பெருமாள் வன்னி மரத்தடியில் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் காட்சி கொடுக்கும் சிற்பங்கள் உள்ளன. உற்சவராகிய கோபால மூர்த்தியின் சிற்பம் மிகவும் பெரியதாய் பார்க்கப் பார்க்கப் பரவசமாகும் நிலையில் அமைந்துள்ளது. புதையலில் எடுக்கப்பெற்ற பெருமாள், நாச்சியார், சக்கரத்தாழ்வார், சிலைகள் சிற்பங்களில் சிறந்தனவாய் மகாமண்டபத்தில் உள்ளன. இவைகளுக்குப் பூஜை இல்லை. மூலவர் மண்டபத்துக்கு முன்னேயுள்ள மண்டபம் சம அளவுள்ளதாக கட்டப்பெற்று ஆங்காங்கு பல மூர்த்திகள்பிரதிட்டை செய்யப்பெற்றுள்ளன. பெரிய திருவடியாகிய கருடனுக்கும், சிறிய, திருவடியாகிய அனுமாருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
சௌந்திரவள்ளி அம்மன்
கெருடாழ்வார்
விநாயகர்
ஸ்ரீ தேவி
பூதேவி
யோக நரசிம்மர்
சௌந்தரராஜ பெருமாள்
விஸ்வக்சேனர்
ஆண்டாள்
ஆழ்வார்கள்1
ஆழ்வார்கள்4
ஆழ்வார்கள் 2
பூஜையில்லா சிலைகள் அம்மன் 2
பூஜையில்லா சிலைகள் ஆழ்வார்கள் 1
ஆஞ்சநேயர்
கண்ணன்
கருப்பையா
சேத்திரபாலகர்
பூஜையில்லா சிலைகள் கோதண்டராமர்
பூஜையில்லா சிலைகள் ஆழ்வார்கள் 2
ஆழ்வார்கள்3
பலிபீடம்
பூஜையில்லா சிலைகள் அம்மன் 1
திருக்கோயில் நன்கொடை
திருக்கோயில் உள்ளே சுத்திகரிப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டுள்ளது




