
Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காரண காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடன்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
சுவாமிக்கும் அம்பிகைக்குமிடையில் தனிச்சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரங்களில் பூரண சுபக்கிரகமான குருபகவான். ஒருவருடைய ஜென்மராசியில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் குருபகவான் வரும் போது நற்பலன்கள் நடக்கும். ஒருவருடைய ஜென்மஇராசியான 1ஆம் இடம் மற்றும் ஜென்ம இராசியில் இருந்து 3, 4, 6, 8, 10 ,12 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சரிக்கும் போது நற்பலன்களைத் தரமாட்டார் என்பது பொது விதி. மேலும் இத்திருக்கோயிலில் எளிய முறையில் அனைத்துப் பக்தர்களும் பங்கு பெறும் வண்ணம் குறைந்த கட்டணத்தில் குருபரிகார ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.வர முடிந்தவர்கள் நேரில் வந்து இந்த குரு பரிகார ஹோமங்களில் பங்கு பெறலாம் நேரில் வர இயலாதவர்கள் உரியக் கட்டணத்தை மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம் அனுப்பி வைத்தால் அவர்களுக்கு அர்ச்சனை / சங்கல்பம் செய்து கூரியர் தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
வசிஷ்டேஸ்வரா்
சுகந்தகுந்தளாம்பிகை
பைரவர்
குருபகவான்
இத்திருக்கோயிலில் எதிரில் அமைந்துள்ள சக்கர தீர்த்தம் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் உருவாக்கப்பட்டது. அனைத்துப் பாவங்களையும் போக்கவல்லது இந்தச் சக்கர தீர்த்தம். தீர்த்தத்தில் பக்தியுடன் புனித நீராடினால் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய பெருமான்களின் பேரருளைப் பெறலாம்.
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலானது திருக்கோயிலானது பல்வேறு கால கட்டங்களில் அமைக்கப்பெற்ற அழகுமிக்க தூண்களையும், சிற்பங்களையும் மண்டபத்தின் மேல் அம்மன் சன்னதிக்கு மேல் 12 இராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள்தங்கள் இராசிக்கு நேர் கீழ் நின்று சிவனையும் அம்பாளையும் வணங்கினால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலில் கொடி மரமும் கோபுர கலசங்களும் கருங்கருக்களாலே பொறிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் உள் பிரகாரத்தில் நான்கு திசைகளிலும் நான்கு சிவ லிங்கங்களும் மூலவருடன் சேர்த்து பஞ்ச லிங்க சேத்ரமாக விளங்குகிறது. மேலும் இத்திருக்கோயிலில் அமைந்துள்ள நவகிரகங்கள் அனைத்தும் ஒரே திசையை பார்த்தவாறு அமைந்துள்ள இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
அன்னதானக்கட்டளை அன்னதானத்திட்டம் நன்கொடை கட்டளை அர்ச்சனை நித்திய ஆராதனை கட்டளை அபிஷேகத்திட்டம்
பக்தர்களுக்கு கட்டளை பிரசாதங்கள் அஞ்சல் வழியில் அனுப்பப்படுகிறது.
அன்னதானம் தினசரி 50 நபர்கள்
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக BATH ROOM வசதி உள்ளது
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கழிவறை வசதி ஆண்களுக்கும், பெண்களுக்கு தனித்தனியாக உள்ளது,
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு திருக்கோயிலின் முகப்பில் வலது,மற்றும் இடது புறத்தில் வாகன நிறுத்த வசதி உள்ளது.
உடல் ஊனமுற்றோர் திருக்கோயிலின் உள்ளே தரிசனத்திற்கு சென்று வர இரு சக்கர நாற்காலி வாகனம் உள்ளது
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளியல், கழிவறை வாகன நிறுத்துமிடம்





