
Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேம்பு
இத்திருத்தலத்தில் கன்னி தெய்வம் கௌமாரியம்மன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். கண் நோய் கண்டவர் . அம்மை நோய் கண்டவர்கள் அம்மனை துாய உள்ளத்துடன் வணங்கி தீர்த்தம் பெற்றுச் சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடும்.
இத்திருக்கோயிலின் ஈசானிய மூலையில் இச்சன்னதி அமையப்பெற்றுள்ளது.
வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலின் காவல் தெய்வமாக அருள்மிகு கருப்பசாமி இத்திருக்கோயிலின் பிரதான முன் மண்டபத்தில் காட்சியளிக்கிறார்.
திருக்கோயில் கல் மண்டபத்தில் வடக்கு பக்கம் மூலையில் அமைந்துள்ள கல் துாணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் தினசரி நண்பகல் 12 மணியளவில் 100 நபர்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
-
திருக்கோயில் வடக்கு நுழைவுவாயில் அருகில் பெண்களுக்காக மூன்று குளியலைறைகள் பயன்பாட்டில் உள்ளது.
இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் -டிசம்பர் -சனவரி மாதங்களில் வெளிமாநில பக்தர்களின் வசதிக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி-தங்கும் இடம் -கழிப்பறை -குளியலறை- வசதிகள் செய்யப்படுகிறது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச காலணி பாதுகாப்பு நிலையம் செயல்பாட்டில் உள்ளது.
இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக திருக்கோயிலில் இரண்டு இடங்களில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் திருவிழா நாட்களில் அம்மன் உலாவருவதற்காக மரத்தாலான தேர் செய்யப்பட்டு தேர் நகர் வலம் வரும் நான்கு வீதிகளிலும் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு தேரோட்டம் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆண்களுக்கு-10 கழிப்பறைகளும் . பெண்களுக்கு -10 நவீன கழிப்பறைகளும் கட்டப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் குடிநீர் வசதியுடன் பயன்பாட்டில் உள்ளது.





