Home/Temples/TN/Theni/Arulmigu Moongilanai Kamatchiamman Temple, Devathanapatti - 625602
Heritage Templehrce

Arulmigu Moongilanai Kamatchiamman Temple, Devathanapatti - 625602

அருள்மிகு மூங்கிலனை காமாட்சியம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி

Theni, TN மூங்கிலணை காமாட்சி அம்மன்
Arulmigu Moongilanai Kamatchiamman Temple, Devathanapatti - 625602 — image 1
1 / 4
Also known as:தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன்

History & Architecture

Century

17th நூற்றாண்டு

Vimanam Type

இதர விமானம்

Pooja Timings

மாலை பூஜை06:00 PM to 06:30 PM IST

Temple Speciality

இதர வகை

சிறப்புகள் கோயிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூசை செய்யப்படுகிறது. கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் சிறப்பான ஒன்றாக உள்ளது. அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை. கோயிலில் நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது. கோயிலில் விளக்குக்காகப் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் நெய் இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன. இந்த நெய்யிற்கு எறும்பு, ஈ, வண்டு என்று எதுவும் வருவதுமில்லை, மொய்ப்பதும் இல்லை. திருவிழாக் காலத்தில் கோயிலில் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நெய் சேகரிப்புக்காக சுமார் ஐம்பது மண்பானைகள் வைக்கப்படுகின்றன. இவையனைத்தும் எட்டு நாட்கள் திருவிழாவில் நிரம்பி விடுகின்றன. தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோயில்களுக்கு இங்கிருந்து நெய் மற்றும் நைவேத்தியப் பொருட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும் போது ராஜகம்பளம் சாதியினர் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக உள்ளது.

Sub Shrines

முருகன் மற்றும் வள்ளி தெய்வானை

திருக்கோயில் உள்புறம் மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் மூலவருக்கு (அம்மனுக்கு இடது புறம்)வடக்கு புறத்தில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் திருமணம் ஆகாதவர்கள் அருள்மிகு காமாட்சியம்மன் சன்னதியில் வழங்கப்படும் மாலையுடன் அருள்மிகு முருகன் சன்னதியில் திருமணம் தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்க வழிபடும் போது மேற்படி தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுகிறது.

விநாயகர் சன்னதி

திருக்கோயில் நுழைவு வாயிலில் தென்புறத்தில் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. பெருமளவில் இத்திருக்கோயிலுக்கு அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மனிடம் வேண்டுதலுக்கு வருகை தரும் பக்தர்கள் காமாட்சியம்மனுக்கு படையல்கள் ஏதும் இல்லாததால் அன்னை காமாட்சியிடம் வேண்டுவதாக நினைத்து பக்தியுடன் விநாகர் சன்னதி முன்பு பொங்கலிட்டு பிராத்தனையை நிறைவேற்றுகின்றனர். விநாயகரை வழிபட்டு விநாயகர் மூலஸ்தானத்தின் தென்புறமாக காட்சி தரும் தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி வழிபடும் போது குருஅருள் பெற்று சந்தானம் பாக்கியம் கிடைக்கிறது, சந்ததான பாக்கியம் நிறைவேறிய பிறகு காமாட்சியம்மனுக்கு கரும்பு தொட்டில் எடுத்து வரும் பக்தர்கள் விநாயகர் சன்னதியில் உள்ள விநாயகரையும் தட்சிணாமூர்த்திக்கும் நன்றி கடன் செலுத்தி பிரார்த்தனை செய்கின்றனர்.

காமக்காள் சன்னதி

காமக்காள் திவசம் பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீந்தார் மனைவி காமக்காள் அன்பவர் தனது ஒரே மகனான பொம்முலிங்கசாமி என்ற மகனுடன் கோயிலுக்குள் இருக்கும் காமக்காள் அரண்மனை எனும் கட்டிடத்தில் வசித்து வந்தார். காமக்காள் தன் பக்தியின் வலிமையால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். இரவில் தன் தாயார் தனியாகச் சென்றி வருவதில் சந்தேகமடைந்த மகம் தாயைக் கோபித்துக் கொண்டார். அவண் அம்மா உண்மையைக் கூறிய நிலையிலும் நம்பாமல் தானும் அம்மனைக் காண வேண்டுமென்று பிடிவாதம் செய்தான். அன்றிரவு காமக்காள் மகனை அழைத்துக் கொண்டு சென்றார். காமாட்சியம்மனை நேரில் கண்ட அவன் மண்டை வெடித்துச் சிதறி இறந்தான். தன் ஒரே மகன் தலை வெடித்து இறந்ததைக் கண்ட காமக்காள் அம்மனிடம், எனக்கு இருந்த ஒரு மகனையும் எடுத்துக் கொண்டாயே. இனி நான் இறந்த பிறகு எனக்குச் செய்ய வேண்டிய திவசக் காரியங்களை (இறந்தவருக்குச் செய்யும் சில சடங்குகள்) யார் செய்வார்? என வருந்திக் கேட்டள். உடனே அம்மன், வருத்தமடையாதே, நீ இறந்த பின் நாயக்கர் சமுதாயத்தவரைக் கொண்டே உனக்கு திவசமிடச் செய்கிறேன் என்று வாக்களித்தாள். காமக்காள் தை மாதம் இரத சப்தமியில் மரணமடைந்தாள். அம்மனின் வாக்குப்படி ராஜகம்பளம் நாயக்கர்கள் திவசமிட்டனர். (காமக்காள் மற்றும் அவள் மகன் சமாதிகள் (கல்லறைகள்) இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.

Services

நன்கொடை

பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

அன்னதானம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 100 பயனாளிகளுக்கும், மற்ற நாட்களில் 50 பயனாளிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக் கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திருக்கோயில் அன்னதானத் திட்டத்திற்கு 80ஜி வருமான வரி விலக்குப் பெறப்பட்டது.

Facilities

சக்கர நாற்காலி

இத்திருக்கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சக்கர நாற்காலி வசதி உள்ளது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

அன்னதான மண்டபத்தில் அமைந்துள்ளது.

கழிவறை வசதி

கட்டணமில்லாக் கழிப்பறை வசதி ஆண்களுக்கு 4, பெண்களுக்கு 4, எனத் தனித் தனியாக நிரந்தரக் கழிப்பறைகள்உள்ளன.

குளியல் அறை வசதி

பெண்களுக்கு தனியாக 2 குளிலறைகள் உள்ளது.

More Temples Nearby

View all →