
Century
21st நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Vimanam Type
சுதை
Sacred Tree (Sthalavriksha)
விடத்தலை மரம்
ஒரு கோயிலின் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் முக்கியமானவை. இங்கு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு முன்பாக ஓடிக் கொண்டிருக்கும் சுரபிநதி என்னும் புகழ் பெற்ற சுருளிநதி, ராஜவாய்க்காலே இதன் தீர்த்தமாகும். இது ஒரு பழமையான நதி.இதில் வருடம் 365 நாட்களும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். நாள்தோறும் பகவானை தரிசிக்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இவர்கள் இந்த வாய்க்காலில் நீராடி மனநிறைவு பெற்ற பின்பே பகவானைத் தரிசிப்பார்கள். எக்காலமும் இதில் நீர் ஓடுவதால் பக்தர்களுக்கு இது ஒரு ஜீவநதியாகத் திகழ்கிறது. பெரியாறு நீர்தேக்கம் அமைந்த பிறகு முல்லைப் பெரியாற்றை இந்நதியோடு கலக்கும்படி செய்தனர். அதனால் இந்த வாய்க்கால் தற்போது அந்தப் பெரியாற்றிலிருந்து பிரிந்து வருகிறது. சனிபகவான் ஒரு காலத்தில் நிடத நாட்டை ஆண்ட நளச் சக்கரவர்த்தியையும், குலிங்க நாட்டு மன்னன் தினகரனையும் மற்றும் பல தேவர்களையும் ஊழ்வினையின் காரணமாக தொடர்ந்து பிறகு நற்பேறளித்த செய்திகளை நூல்களில் படிக்கக் காணலாம். சில சமயங்களில் நல்லவர்களையும் பற்றுவதற்கு பூர்வவினை காரணமாக இருந்த போதிலும் தமக்கு பாவம் உண்டென்று கருதி அப்பாவம் நீங்குவதற்பொருட்டு ஈஸ்வரன் கட்டளைப்படி விடத்தலை மரத்தடியில் தியானத்தில் அமர்ந்து மனநிறைவு பெற்று மகிழ்வுடன் வீற்றிருக்கும் இடம் இத்திருத்தலமாகும்.
அருள்மிகு சனீஸ்வர பகவான் சுவாமி சன்னதிக்கு வடக்கு பக்கம் தனி உப சன்னதியாக முருகன் சன்னதி அமைந்துள்ளது.
அருள்மிகு சனீஸ்வர பகவான் சுவாமி சன்னதிக்கு கிழக்கு பக்கம் சுரபிநதி கால்வாய் அருகில் தனி உப சன்னதியாக நாகர் சன்னதி அமைந்துள்ளது.
அருள்மிகு சனீஸ்வர பகவான் சுவாமி சன்னதிக்கு தெற்கு பக்கம் தனி உப சன்னதியாக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
அருள்மிகு சோனைக் கருப்பணசாமி சனீஸ்வரபகவானின் முன்னோடித் தெய்வமாக காவற்கடவுளாக காட்சியளிப்பவர் ஆவார்.
அருள்மிகு சனீஸ்வர பகவான் சுவாமி சன்னதிக்கு கிழக்கு பக்கம் சுரபிநதி கால்வாய் அருகில் கிழக்கு நோக்கி தனி உப சன்னதியாக சப்தகன்னிமார் சன்னதி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் கடந்த 19.11.2011 தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, நாள்தோறும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 25 பயனாளிகள், சனிக்கிழமைகளில் 50 பயனாளிகள் உணவருந்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு 25 நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கிட ரூ 875/ மற்றும் சனிக்கிழமையன்று 50 நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கிட ரூ 1750/ செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்தில் பங்கு கொள்ளலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு 80 ஜி உண்டு.
இத்திருக்கோயிலில் கடந்த 19.11.2011 தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, நாள்தோறும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 25 பயனாளிகள், சனிக்கிழமைகளில் 50 பயனாளிகள் உணவருந்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு 25 நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கிட ரூ 875/ மற்றும் சனிக்கிழமையன்று 50 நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கிட ரூ 1750/ செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்தில் பங்கு கொள்ளலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு 80 ஜி உண்டு.
திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது
திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது
திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது
திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது
திருக்கோயில் அலுவலகத்தில் உள்ளது
இத்திருக்கோயிலில் இலவச முடி எடுக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.





