அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பட்டூர் கிராமம்

Century
தெரியவில்லை
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மகிழ மரம்
இத்திருக்கோயில் அருள்மிகு பிரம்மா தனக்கு ஐந்து முகங்கள் உள்ளதால், தானும் ஈசனைப் போல முத்தொழிலும் செய்ய வல்லான் (படைத்தல், காத்தல், அழித்தல்) என்று தனக்குள் செருக்குற்றார். அதனால், பிரம்மாவின் செருக்கை அடக்க எண்ணிய ஈசன் பிரம்மாவின் ஒரு தலையை கொய்ததோடு படைப்பாற்றலையும் நீக்கினார். தனது தவறை உணர்ந்த பிரம்மா இத்தலத்தில் 12 (துவாதச) சிவலிங்கங்களையும், தீர்த்த கிணற்றையும் உருவாக்கி வழிபட்டு தன் பழைய சக்திகளை மீண்டும் பெற்றதோடு, இத்தலத்தில் வழிபட வரும் பக்தர்களின் தலையெழுத்தை மங்கலகரமாக மாற்றும் வரத்தினையும் ஈசனிடமிருந்து பெற்று பிரம்மா அருள்புரிந்து வருகிறார். தொல்காப்பியம், புறநானூறு, தேவாரம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த திருத்தலம். கட்டுமான கலை சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோயிலாக அமையப்பெற்றுள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் விளங்குகிறது. பல்லவ மன்னன் முதலாம் ராஜசிம்மன் கட்டிய காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயிலைப் போல் இது கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலை, கருவறையில் உள்ள தாராலிங்கம் (16 பட்டை) ஆகியவற்றின் நுட்பங்களையும் அழகியலையும் நோக்கும்போது திருப்பட்டூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முதலாம் இராஜசிம்மன் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருத முடிகிறது. சிலர் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.700-728) காலத்தியது என்று கருதுகின்றனர். மேலே சாந்தார வகை விமானம் கங்கை கொண்ட சோழபுர விமானம் போல உள்ளீடு இல்லாது உச்சி வரை செல்கிறது. இத்திருக்கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சூரிய பகவான் தன் கதிர்களைக் கொண்டு சிவனாரின் சந்நிதியில் விழுந்து நமஸ்கரித்து வழிபடுவதாக ஐதீகம். அன்றைய நாளில் காலையில் 06.15 முதல் 06.45 மணி வரை சூரிய ஒளி மூலவர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் மீது விழும் அற்புத நிகழ்வை தரிசிக்கலாம். ஆடல்வல்லானான நம் சிவனாரின் திருநடனத்தை தரிசிக்கும். பேறு பெற்ற வியாக்ரபாதரும் பதஞ்சலியும் தவம் செய்த புண்ணிய தலம் இது. இன்றைக்கு இருக்கின்ற அத்தனை யோக தியானங்களுக்கு எல்லாம் அடிப்படையே பதஞ்சலி முனிவர் அருளிய யோக சூத்திரம் ஆகும். அப்பேற்பட்ட ஞான முனி பதஞ்சலிக்கு இத்திருக்கோயிலில் பிரம்மா சந்நதிக்கு அடுத்த திருச்சுற்று பகுதியில் பதஞ்சலி சந்நதி அமைந்துள்ளது. திருப்பிடவூர், திருப்படையூர் எனப்படும் திருப்பட்டூர் தலத்தில் மூவாயிரத்தொரு அந்தணர்கள் இருந்து சிவபூஜை செய்ததாக நம்பப்படுகிறது.
இத்திருக்கோயில் அருள்மிகு பிரம்மா தனக்கு ஐந்து முகங்கள் உள்ளதால், தானும் ஈசனைப் போல முத்தொழிலும் செய்ய வல்லான் (படைத்தல், காத்தல், அழித்தல்) என்று தனக்குள் செருக்குற்றார். அதனால், பிரம்மாவின் செருக்கை அடக்க எண்ணிய ஈசன் பிரம்மாவின் ஒரு தலையை கொய்ததோடு படைப்பாற்றலையும் நீக்கினார். தனது தவறை உணர்ந்த பிரம்மா இத்தலத்தில் 12 (துவாதச) சிவலிங்கங்களையும், தீர்த்த கிணற்றையும் உருவாக்கி வழிபட்டு தன் பழைய சக்திகளை மீண்டும் பெற்றதோடு, இத்தலத்தில் வழிபட வரும் பக்தர்களின் தலையெழுத்தை மங்கலகரமாக மாற்றும் வரத்தினையும் ஈசனிடமிருந்து பெற்று பிரம்மா அருள்புரிந்து வருகிறார்.
உப சன்னதி
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோயிலாக அமையப்பெற்றுள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பல்லவ மன்னன் முதலாம் ராஜசிம்மன் கட்டிய காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயிலைப் போல் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலை, கருவறையில் உள்ள தாராலிங்கம் (16 பட்டை) ஆகியவற்றின் நுட்பங்களையும் அழகியலையும் நோக்கும்போது திருப்பட்டூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முதலாம் இராஜசிம்மன் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருத முடிகிறது. சிலர் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.700-728) காலத்தியது என்று கருதுகின்றனர். மேலே சாந்தார வகை விமானம் கங்கை கொண்ட சோழபுர விமானம் போல உள்ளீடு இல்லாது உச்சி வரை செல்கிறது
உப சன்னதி
உப சன்னதிகள்
துவாதச சன்னதிகள்
உப சன்னதி
உப சன்னதி
உப சன்னதி
உப சன்னதி
உப சன்னதி
உப சன்னதி
உப சன்னதி
உப சன்னதி
உப சன்னதி
உப சன்னதி
இத்திருக்கோயிலின் வெளிபுறத்தில் பகுள தீர்த்த குளம் ஒன்று உள்ளது
இத்திருக்கோயிலின் உள்ளே பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோயிலாக அமையப்பெற்றுள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பல்லவ மன்னன் முதலாம் ராஜசிம்மன் கட்டிய காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயிலை போல் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் கட்டட கலை மற்றும் சிற்பக்கலை கருவறையில் உள்ள தாராலிங்கம் (16 பட்டை) ஆகியவற்றின் நுட்பங்களையும் அழகியலையும் நோக்கும்போது திருப்பட்டூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முதலாம் இராஜசிம்மன் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதமுடிகிறது. சிலர் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.700-728) காலத்தியது என்று கருதுகின்றனர். மேலே சாந்தார வகை விமானம் கங்கை கொண்ட சோழபுர விமானம் போல உள்ளீடு இல்லாது உச்சி வரை செல்கிறது. திருக்கோயிலின் வெளிபுறம் மணற்கற்கலால் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் நன்கொடை / உபயம் தர விரும்பும் பக்தர்கள் நேரடியாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது
இத்திருக்கோயிலில் தினந்தோறும் 100 நபர்களுக்கும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்பின்படி பிரதி வியாழன்தோறும் வடை பாயாசத்துடன் 500 நபர்களுக்கும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
திருக்கோயில் உள்ளே அம்மன் சன்னதி செல்லும் வழியில் உள்ளது மற்றும் திருக்கோயில் வெளியே வசந்த மண்டபம் முன்புறம் உள்ளது
இத்திருக்கோயிலுக்கு முன்புறம் ஒன்று உள்ளது
ஆண்கள் கழிவறைகள் 6 மற்றும் பெண்கள் கழிவறைகள் 6 ஆக மொத்தம் 12 கழிவறைகள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக உள்ளன.
ஆண்கள் கழிவறைகள் 6 மற்றும் பெண்கள் கழிவறைகள் 6 ஆக மொத்தம் 12 கழிவறைகள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக உள்ளன.
திருக்கோயிலின் நுழைவாயிலில் சக்கர நாற்காலி இரண்டு உள்ளது





