அருள்மிகு சந்திரசேகரசாமி திருக்கோயில், Jeeyapuram, Thiruchendurai

Century
9th நூற்றாண்டு
Praised By
இல்லை
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பலாமரம்
இத்திருக்கோயிலில் சிவனுக்கும் சக்திக்கும் எதிரில் பஞ்சபூத தூண் உள்ளது . அதில் வலது கை விரல்களை வைத்து இருவரையும் வணங்கினால் நினைத்த காரியம் 48 நாட்கள் சாத்தியமாக நடந்து எல்லா வளமும் பெருகும் என்ற வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அகத்தியர் வசிஷ்டர் ஜோதிட ஓலைச்சுவடிகள் எல்லா வளமும் பெருகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நவகிரகங்களின் சன்னதியில் சூரிய தேவர் தன்னுடைய மனைவியுடன் நடுவில் காணப்படுகிறார் இது தனிச்சிறப்பாகும்.
விஸ்வநாத சுவாமி மற்றும் விசாலாட்சி தனி சன்னதி மூலவருக்கு மூலவருக்கு வலது புறமாக கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதி மூலவருக்கு மூலவருக்கு வலது புறமாக தெற்கு நோக்கி சூரியன் சந்திரன் மற்றும் கங்கையுடன் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்
சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானையுடன் தனி சன்னதி சன்னதியில் மூலவருக்கு பின்புறமாக கிழக்கு புறமாக அமைக்கப்பட்டுள்ளது.
கஜலட்சுமி அம்மன் சன்னதி மூலவருக்கு பின்புறமாக கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு துர்க்கை சன்னதியில் அம்மன் சங்கு சக்கரத்துடன் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.
காலபைரவர் மூலவரை நோக்கி மேற்குப்புறமாக தன்னுடைய வாகனத்துடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.சூரியன் சன்னதி தனித்தனியே மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது..
சண்டிகேஸ்வரர் சன்னதி மூலவருக்கு இடதுபுறமாக தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.





