Arulmigu Kasiviswanathswamy temple, Alunthur

Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி உடனுறை காசிவிசாலாட்சி அம்மன் திருக்கோயில் திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், அளுந்தூர் கிராமத்தின் செங்குளம் கரையின் கிழக்கு புறத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அளுந்தூர் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மிகவும் பழமை வாய்ந்த சோழர் காலத்து விசேஷமான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கருங்கற்களால் ஆன கூரை அமைந்துள்ளது. இக்கோயில் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தது. விமானங்கள் ஏதும் இல்லை. இத்திருக்கோயிலில் நவதுவாரம் உள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி சன்னதியில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை கற்களால் கட்டப்பட்டு மிகவும் சேதமடைந்துள்ளன. சுவர்களும் கூரையும் உடைந்து இடிபாடுகளில் காணப்படுகின்றன. மேலும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது, இந்த சன்னதியின் அடிப்பகுதி பூமியில் புதைந்துள்ளது. மூன்று கல் சிலைகள் (சுவாமி, அம்பாள், விநாயகர், நந்திகேஸ்வரர், பைரவர் மற்றும் உடைந்த முருகன் சிலை). காம்பவுண்ட் சுவர் மற்றும் கதவுகள் இல்லை. பழைய மரக் கதவுகள் சேதமடைந்துள்ளன. இப்போது தற்காலிக கிரில் கேட் உள்ளது.
அ/மி விநாயகர் சன்னதி
அ/மி முருகன் சன்னதி
அ/மி காலபைரவர்சன்னதி
அ/மி காசி விசாலாட்சி சன்னதி





