அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், Pettavaithalai

Century
13th நூற்றாண்டு
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஒரு நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
ஒரு உயிரினம் கருவுற்று இருக்க நாம் அறியாது அதனை கொன்றாலும் ஏற்பட கூடிய தோஷம் பிரம்ம ஹத்தி தோஷம் எனப்படும். இவ்வாறு முப்பிறவிகளில் முன்னோர்களால் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம் நிவத்தியடைய இத்திருத்தலத்தில் உள்ள பிரம்ம ஹத்தி சிற்பத்திற்கு அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வரப்படுகிறது. பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு இத்திருத்தலத்தில் அமைந்துள்ள பொற்றாலம் பூவாய் சித்தர் ஜூவ ஜோதியாய் ஐக்கியமான சிறப்பு தூணில் பிரார்த்தனை சீட்டு தங்கள் கைப்பட எழுதி கட்டி சிறப்பு பிரார்த்தனை செய்தால் நிவத்தியாகும் என்பது பழங்கால நம்பிக்கைகாய ஐதீகமாய் இருந்து வருகிறது.
இத்திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு 50நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கப்பட்டுவரப்படுகிறது. தினசரி மதியம் 12.30 மணிக்கு இத்திருக்கோயிலுக்கு வரும் வெளியூர் சேவார்த்திகள் மற்றும் பக்தர்களுக்கு டோக்கன் முறையில் எவ்வித பாகுபாடுகளுக்கு இடம் இல்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டுவரப்படுகிறது. 50 நபர்கள் ஒரு நாள் அன்னதான திட்டத்திற்கு ரூ.1500/- மற்றும் நிரந்தர முதலீடு திட்டத்தின் கீழ் ரூ.20000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்க்கு 10 லிட்டர் அளவு சுத்திரிக்ககப்பட்ட குடிநீர் உருவாக்கும் இயந்திரம் பக்தர்கள் வசதிக்காக நந்தி மண்டபத்தில் இயங்கும் நிலையில் உள்ளது.





