Arulmigu Maruthandeeswarar Temple, Kovandakurichi

Century
12th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடன்
இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் மிகவும் பழமையானதாகும். அதேபோல அம்பாள் சிற்பம், நந்தி ஆகியவை சோழர் காலச் சிற்பங்களாகும். இக்கோயிலில் உள்ள இறைவன், இறைவியை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு முற்பிறவியில் செய்ய பாவங்கள் நீங்கி இப்பிறவியில் செல்வமும், நோயற்ற வாழ்வும், மன அமைதியும் கிடைக்கும் என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை ஆகும். மேலும் இக்கோயில் ஒரு நவக்கிரகதோஷப் பரிகாரக் கோயிலாகவும் திகழ்கிறது. ஞாயிற்றுக் கிழமையில் மாலையில் ராகு காலப் பூஜை செய்து நெய் விளக்கு, எலுமிச்சை விளக்கு மிளகு, எள் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வோர்க்கு உள்ள திருமணதோஷங்கள், விவாகத்தடைகள், ராகு, கேது தோஷங்கள், தடைகள் நீங்கி சீக்கிரத்தில் திருமணம் நடைபெறுதலும், குழந்தைப் பாக்கியம் அடைதலும் கைமேல் பலனாக கிடைப்பதைக் காணலாம்.


