அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில், Woraiyur, Thiruchirappalli

Century
3rd நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம், பிரம்மனுக்கு ஐந்நிறம் காட்டி அத்ன் மூலம் ஐவகை பூதங்களையும் ஆக்கி-அதனள் ஒடுங்கி அப்பூதங்களின் நிறங்களையும் ஏறிட்டுக் கொண்டு உலகுக்கு அருள்பயவன் தானே என்பதை உணர்த்தியர், உதங்க மாமுனிவருக்கு ஐவகை நிற லிங்கமாக காட்சிக் கொடுத்து ஐம்பூதங்கள்இ ஐம்புலன்கள் யாவும் தானே என்பதை முனிவருக்கு உணர்த்தி அவருடைய மன கலக்கத்தைப் போக்கி மன அமைதியை அருளியவர்,
இத்திருக்கோயில் விநாயகர், முருகன், சரஸ்வதி, மகாலெட்சுமி , தட்சிணாமூர்த்தி போன்ற உப சன்னதிகள் உள்ளது.
யானையை அடக்கிய கோழி வரலாற்றுக்குப்பின் கோழ அரசன் திருக்கோயில் அமைத்த போது அமைக்கப்பெற்ற தீர்த்தமே திருக்கோயில் உள்ளே இருக்கும் திருக்கோயில் திருக்குளம். அதன் பெயரே சிவதீர்த்தம், உதங்க முனிவர் நீராடிப் பேறுபெற்ற தீர்த்தம் தேவதச்சுருதி நீராடிப் பெய் வடிவு நீங்கப்பெற்ற தீர்த்தம் தன்னிடம் விழுந்து இறந்த பன்றிக்கு தேவ வடிவு அருளிய தீர்த்தம்.
சிற்பங்கள் எதுவும் இல்லை
தினமும் திருக்கோயில் சார்பாக ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது. மேலும் திருவிழாக்களில் நுறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம், திருமணம் நடத்துதல் போன்ற வசதிகள் இத்திருக்கோயிலில் உள்ளது.





